india

img

மூன்றாம் காலாண்டில் 62 சதவீதம் அதிகரித்து ரூ. 8,432 கோடி நிகர இலாபம் ஈட்டியது எஸ்பிஐ  

பாரத ஸ்டேட் வங்கி, அக்டோபர் முதல் டிசம்பர் வரையான மூன்றாவது காலாண்டில் 62 சதவீதம் அதிகரித்து ரூ. 8,432 கோடியாக உயர்ந்துள்ளதாக சனிக்கிழமை தெரிவித்துள்ளது.  

பாரத ஸ்டேட் வங்கி அக்டோபர் முதல் டிசம்பர் வரையான மூன்றாவது காலாண்டில் இதுவரை இல்லாத அளவில் ரூ. 8,432 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.  இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஒப்பிடுகையில் 62 சதவீதம் உயர்வை குறிக்கிறது. வட்டி மூலம் கிடைக்கும் நிகர வருமானமும் முந்தைய ஆண்டை விட 62 சதவீதம் அதிகரித்துள்ளது.  

வங்கி வழங்கிய கடன்களின் மொத்த தொகையில் வீட்டுக்கடன் 24 சதவீதமாக உள்ளது. இதுவும் கடந்த ஆண்டைவிட இந்த காலகட்டத்தை ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. கூடுதலாக கார்ப்பரேட் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவன பிரிவின் வளர்ச்சியும் மூன்றாம் காலாண்டில் அதிகரித்துள்ளது.    

மேலும் வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள வைப்புத் தொகையும் முந்தைய ஆண்டைவிட 9 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.