வரவிருக்கும் மக்களவை தேர்த லில் 48 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கி ரஸ் - தேசியவாத காங்கிரஸ் (சரத்) - சிவ சேனா (உத்தவ்) ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) என்ற பெயரில் தேர்தலை சந்திக்கின்றன. பாஜக - தேசியவாத காங்கிரஸ் (அஜித்) - சிவ சேனா (ஷிண்டே) மூலம் தேசிய ஜன நாயக கூட்டணி தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
கருத்துக்கணிப்பால் தெருத் தெருவாக அலையும் பாஜக
சமீபத்தில் வெளியான இந்தியா டுடே - சி வோட்டர் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் (சரத்) - சிவசேனா (உத்தவ்) கட்சிகளின் எம்விஏ கூட்டணி 45 சதவீத வாக்குகளு டன் 28 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும், பாஜக கூட்டணி 40 சதவீத வாக்குகளுடன் 20 இடங்களை தாண்ட வாய்ப்பில்லை என்றும் கருத்துக்கணிப் பில் கூறப்பட்டது.
கருத்துக்கணிப்பு வெளியான அடுத்த சில நாட்களில் எம்விஏ கூட்டணி கட்சித் தலைவர்களை இழுக்க பாஜக தீவிரமாக களமிறங்கியது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மிலிந்த் தியோரா ஏக்நாத் தலைமையிலான சிவசேனா கட்சியிலும் (மாநிலங்களவை பதவிக்காக கட்சியில் மாற்றி அனுப்பப் பட்டுள்ளார்), மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான அசோக் சவாண் பாஜக விலும் இணைந்தனர். இருவரையும் மாநி லங்களவை ஆசை காட்டி பாஜக வளைத்துள்ள நிலையில், எம்விஏ கூட்ட ணியில் இருந்து மேலும் சில தலை வர்களை தங்கள் பக்கம் இழுக்க மகா ராஷ்டிரா மாநில வீதிகளில் பாஜக அலைந்து வருகிறது.