india

img

அமித்ஷா கலந்து கொண்ட விழாவில் 13 பேர் உயிரிழப்பு

நவி மும்பை கார்கரில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்கும் விழாவில் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை கார்கரில் 'மகாராஷ்டிரா பூஷன் விருது' வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று விருதுகளை வழங்கினார். அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். காலை 11.30 மணிக்கு தொடங்கப்பட்டு, 1 மணிக்கு வரை நடந்த இந்த நிகழ்விற்கு லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் திறந்த வெளியில் 36 டிகிரி வெப்பநிலையில் அமர வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு 13 பேர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 24 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இதை அடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பாடுகள் அலட்சியமாக செய்யப்பட்டதன் விளைவாக 13 உயிர்கள் பறிபோயின என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.