SLV C56 ராக்கெட் வரும் 30-ஆம் தேதி காலை 6.30-க்கு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு.
சிங்கப்பூர் நாட்டின் DS SAR புவிநோக்கு செயற்கைகோளுடன் PSLV C56 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.
தகவல் தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டு செயற்கைக்கோள் ஆகியவைகளை இஸ்ரோ நிறுவனம் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. மேலும் வணிக ரீதியாக வெளிநாடான சிங்கப்பூர் நாட்டின் DS SAR புவிநோக்கு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
முதன்மை செயற்கைக்கோளான DS SAR செயற்கைக்கோள் 352 கிலோ எடை கொண்டதாகும். இது ‘சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா்’ என்ற நவீன தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. இரவு, பகல் என அனைத்து காலநிலையிலும் துல்லியமான படங்களை எடுத்து அனுப்பும் திறனுடன் அந்தச் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனுடன் வெலாக்ஸ்-ஏஎம் (23 கிலோ), ஆா்கேட் (24 கிலோ) உட்பட 6 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன என இஸ்ரோ தெரிவித்துள்ளது.