இந்திய முன்னாள் நட்சத் திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சமீபத்தில் ஒன்றிய பாஜக அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்தார். உடனே ஊடகங்கள் யுவராஜ் சிங் பாஜகவில் இணையவிருப்பதாகவும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர் தலில் பஞ்சாப்பின் குர்தாஸ் பூர் தொகுதியில் போட்டியிட விருப்பதாகவும் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டன.
இந்நிலையில், இந்த விவ காரம் குறித்து யுவராஜ் சிங் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத் தில் கூறுகையில், “ஊடகங்க ளில் வெளிவந்திருக்கும் அறிக் கைகள் உண்மையல்ல. நான் குர்தாஸ்பூரில் தேர்தலில் போட்டியிடவில்லை. பல்வேறு நிலைகளில் உள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் உதவுவ திலும் மட்டுமே நான் ஆர்வ மாக உள்ளேன். எனது YOU WE CAN (உங்களால் எங்களால் முடியும்) அறக்கட்டளை மூலம் அதைத் தொடர்ந்து செய்ய நினைக்கிறேன். எங்களின் சிறந்த திறன்களை ஒன்றாக வெளிப்படுத்தி மாற்றத்தை உருவாக்குவோம்” என்று யுவ ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவை நெருங்கியுள்ள தால் பாஜகவிற்கு ஆதரவாக வும், எதிர்க்கட்சிகளுக்கு எதி ராகவும் மக்களிடம் குழப் பத்தை ஏற்படுத்தும் வகையில் பெரும்பாலான ஊடகங்கள் (கோடி மீடியா) பல்வேறு ஆதா ரமற்ற தகவல்களை தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு வரு கின்றன.
3 வாரத்திற்கு முன்பு காங்கி ரஸ் மூத்த தலைவர் கமல்நாத் பாஜகவில் இணையவுள்ள தாக ஒருவாரமாக ஒரு புரட்டுப் புரட்டி எடுத்தன. இதை புரட்டு, புரளி என கமல்நாத்தே நேரடி யாக ஊடகங்கள் முன்னி லையிலேயே,”நான் காங்கி ரஸ் கட்சியிலேயே தொடரு கின்றேன். ஊடகங்கள் தவ றான செய்தியை வெளியிட்டு வருகின்றன” என அவர் கூறி னார். இதேபோன்று யுவராஜ் சிங் பாஜகவில் இணைய விருப்பதாகக் கூறி, அவரிட மும் கோடி மீடியா ஊடகங்கள் குட்டு வாங்கியுள்ளன.