தில்லி சாகேத் நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தில்லி சாகேத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று வழக்குரைஞர் உடையில் வந்த நபர் ஒருவர் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குற்றப் பின்னணி கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், படுகாயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.