india

img

எதிர்மறையான ஜிடிபி வளர்ச்சி, பொருள்கள் விலை உயரும்....

புதுதில்லி:
ஜிடிபி வளர்ச்சி வரும் காலாண்டில் எதிர்மறையாக இருக்கும். பருப்புகள் உள்ளிட்ட பொருள்கள் விலை உயரும் என்றும் வீடு,வாகன கடன்களுக்கான கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக மூன்று மாதம் அவகாசம்நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அடுத்த சில மாதங்களில் பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர வாய்ப்பு உள்ளது. சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ரிசர்வ் வங்கியால் குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் அளிக்கும்.ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும் மாநிலங்களுக்கான நிதிப் பிரச்சனைகளை சரி செய்யவும் வங்கி நடவடிக்கை எடுக்கும். 2020-21ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும்.தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மூலதன கடன்கள் அளிக்கப்படும். மேலும் 3 மாதங்களுக்கு சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மாதத் தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது . கால அவகாசம் ஜூன் மாதத்தில் இருந்துஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டெழும். உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும்.தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17 சதவிகிதம் குறைந்துள்ளது.ஜிடிபி வளர்ச்சி வரும் காலாண்டில் எதிர்மறையாக இருக்கும். வீடு, வாகன கடன்களுக்கான கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக மூன்று மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;