india

img

விவசாயி விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்திடுவோம்

புதுதில்லி, ஜூலை 20 - மத்திய அரசின் விவசாயி விரோத, விவசாய விரோதக் கொள்கைகளுக்கு எதிராக விவசாய சங்கங்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திடுவோம் என்று அகில இந்திய கிசான் கவுன்சில் அறைகூவல் விடுத்துள்ளது. சமீபத்தில் ஹைதராபாத்தில் ஜூலை 12-14 தேதிகளில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின், அகில இந்திய கிசான் கவுன்சில் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் நாட்டிலுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய நிலை மைகளை குறித்து விவாதிக்கப்பட்டு, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து திட்டமிடப்பட்டது.

தேசிய பயிலரங்கு

முன்னதாக, ‘விவசாய நெருக்கடி மற்றும் இதனைத் தீர்ப்பதற்கான மாற்றைக் கட்டி எழுப்புவதில் தொழிலாளி - விவசாயி சமூகக் கூட்டுறவுகளின் பங்கு’ என்னும் தலைப்பில் நாடு தழுவிய அளவில் பயிலரங்கு ஒன்றும் நடைபெற்றது.  இப்பட்டறையை கேரள மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் துவக்கி வைத்தார். பட்டறையில் பேரா சிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா சிறப் புரையாற்றினார். நாடு முழுதுமிருந்து 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டனர். வெற்றி கரமாக இயங்கக்கூடிய கூட்டுறவு அமைப்புகள் குறித்தும், தங்கள் பகுதிகளில் கூட்டுறவு நடவடிக்கை களுக்கான இயக்கத்தைக் கட்டி எழுப்புவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பிரதிநிதிகள் தங்கள்  அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட னர். பின்னர் நாட்டில் நிலவும் வறட்சி நிலைமைகள் குறித்தும் அதனைத் தீர்ப்பதில் மத்திய அரசும் பல்வேறு  மாநில அரசுகளும் அக்கறையற்று இருப்பது குறித்தும் கிசான் கவுன்சில் கூட்டத்தில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து எவ்விதமான அக்கறையுமின்றி இருந்திடும் மத்திய அரசு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேசியப்பேரிடராக அறிவித்திடுக
வறட்சி பாதித்த பகுதிகள், தேசியப் பேரிடர் நிதியத்திற்கு நிதி  வழங்குவதிலிருந்து விலக்கு அளித்திட வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளதால் இதனை தேசியப் பேரிடராக அறி வித்திட வேண்டும் என்று அகில இந்திய கிசான் கவுன்சில் கோரியது. மேலும், வறட்சியால் ஏற்பட்டுள்ள பயி ரிழப்புக்கான இழப்பீடு, அத்தியா வசியப் பொருள்கள் இலவசமாக வழங்குதல், கடன்கள் தள்ளுபடி செய்தல் மற்றும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் வேலை கள் வழங்குதல் உட்பட வலுவான நிவாரண நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும் கிசான் கவுன்சில் கோரியது. கிசான் கவுன்சில் கூட்டத்தில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், விவ சாயிகளுக்கு அளிக்க வேண்டிய உரிமத்தொகைகளை அளித்திடாமல் ஏமாற்றுவது தொடர்பாகவும், விவசாயி களை ஏமாற்றி அதீத லாபத்தை அள்ளிச்செல்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

பழங்குடிமக்களுக்குத் துரோகமிழைப்பு
2019 பிப்ரவரி 13 உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பல லட்சக்கணக்கான பழங் குடியினர் மற்றும் காலங்காலமாகக் காடுகளில் வாழ்ந்துவரும் பூர்வகுடி யினர் தங்கள் வசிப்பிடங்களைக் காலி செய்ய வேண்டிய அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றனர். இதற்கெதி ராக நாடு தழுவிய அளவில் போராட்டங் கள் வெடித்ததைத் தொடர்ந்து,  உச்ச நீதிமன்றம், தன் தீர்ப்பினைத் திருத்திக் கொண்டு, தன் முந்தைய தீர்ப்புக்கு 2019 ஜூலை 10 வரையிலும் தடை விதித்திருந்தது. அடுத்து இது தொடர்பாக பல்வேறு மனுக்களின் மீதான விசாரணையை வரும் ஜூலை 24 அன்று நடத்துகிறது. மத்திய பாஜக அரசாங்கமும், வனங்களை கார்ப்பரேட்டுகள் சூறை யாடிச் செல்வதற்கு வசதி செய்துதரும் விதத்திலும் பழங்குடியின மக்களைச் சுரண்டும் விதத்திலும் இந்திய வனச் சட்டத்திற்கு மிகக் கொடுமையான சட்டத்திருத்தங்களை முன்மொ ழிந்துள்ளது.

ஜூலை 22இல் கிளர்ச்சிப் போராட்டம்

இது தொடர்பாக 2019 ஜூலை 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தில்லி யில் நிலம் மற்றும் வன உரிமைகள் இயக்கங்களின் தேசியக் கலந்தா லோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், வரும் ஜூலை 22 அன்று கிராம, ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவில் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் அவற்றிற்கு எதிராகவும் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளது. வன உரிமைகள் சட்டம் மற்றும் பழங் குடியினருக்கு ஆதரவாக உச்சநீதி மன்றத்தில் தாங்கள் தலையிட வேண்டுமென்று அனைத்து மாநில முதலமைச்சர்களும் மேற்கண்ட கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். 2019 ஜூலை 22 அன்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க த்தினருடனும்,  ஆதிவாசி அதிகார் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பினருடனும் இணைந்து, நாடு தழுவிய அளவில் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டுள் ளது. அன்றைய தினம் தில்லியிலும் கிளர்ச்சிப் போராட்டம் நடைபெறும். (ந.நி.)

;