வெட்கங்கெட்டவர்கள்
மணிப்பூர் மாநிலத்தில் 2023ஆம் ஆண்டில் வெடித்த வன்முறை இப்போது வரை முடிவுக்கு வரவில்லை. அரசு தந்த கணக்கின்படியே 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துந்துள் ளனர். பெண்கள் கொடூரமான பாலியல் வன்முறை களை சந்தித்து அதிலிருந்து மீள முடியாமல் தவிக் கின்றனர். பல்லாயிரக்கணக்கனோர் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் முகாம்களில் தங்கியுள்ளனர்.
இரட்டை எஞ்சின் அரசு இருந்தால்தான் மாநிலம் சிறப்பாக இருக்கும் என்பது பிரதமர் மோடி அடிக்கடி தேர்தல் பிரச்சாரத்தில் உச்சரிக்கும் வார்த்தை. மணிப்பூரில் நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்முறைகளுக்கு ஒன்றிய மற்றும் மாநில பாஜக கூட்டணி அரசுகளே பொறுப்பு. ஆனால் இதுகுறித்த எந்த குற்ற உணர்ச்சியும் பிரதமர் மோடிக்கு இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கலவரம் நீடிக்கும் மணிப்பூர் மாநிலத்தை இன்று வரை அவர் எட்டிக்கூடப் பார்க்க வில்லை.
கலவரத்தை தூண்டிவிட்டதில் முதலமைச்ச ராக இருந்த பைரேன் சிங்கிற்கு நேரடி பொறுப்பு உண்டு என குற்றம் சாட்டப்பட்டது. இனரீதியா கவும், மதரீதியாகவும் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதில் அவர் குறியாக இருந்தார். கலவரத்தை தூண்டிவிட்டதில் பைரோன் சிங்கிற்கு பங்கு உண்டு என்று பாஜகவைச் சேர்ந்த குக்கி இன எம்எல்ஏக்களே குற்றம்சாட்டினர்.
இந்தநிலையில், கலவரத்தை தடுக்கத் தவறி யதாக முதல்வராக இருந்த பைரேன் சிங் மன்னிப்பு கோரினார். பெரும்பான்மையை இழந்து விடும் நிலை ஏற்பட்டதால் தம்முடைய பதவியை ராஜினாமா செய்தார். பாஜக கூட்டணியால் ஆட்சியை தக்க வைக்க முடியாததால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக்கப்பட்டது. அப்போதும் கூட கலவரத்தை ஒன்றிய அரசால் முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை.
மணிப்பூரில் ஆட்சியை இழந்தபோதும் சட்ட சபையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த ஒன்றிய பாஜக கூட்டணி அரசு தயாராகயில்லை. கலவ ரத்தை கட்டுப்படுத்தி மாநிலத்தில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த வக்கற்ற பாஜக தற்போது மீண்டும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளது வெட்கக்கேடானது. இதற்கான தார்மீகத் தகுதி பாஜகவுக்கு இல்லை.
மணிப்பூர் மாநிலத்தில் இப்போதும் கூட பதற்றம் நீடித்து வருகிறது. அரசு பேருந்து ஒன்றில் மாநிலத்தின் பெயரை பாதுகாப்புப் படையினர் அழித்ததை எதிர்த்து மெய்தி இன மக்கள் போராடுகின்றனர். மறுபுறத்தில் சிறுபான்மை, குக்கி மக்கள் மீதான தாக்குதலும் ஓயவில்லை. இருந்தும் கூட மீண்டும் ஆட்சியமைக்க பாஜக தனது வழக்கமான ஆள்பிடி அரசியலை மேற்கொள்கிறது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டி மக்கள் நிம்மதியாக ஒன்றுமையு டன் வாழ்வதே முதல் பணியாகும். ஆனால் பாஜக தனது சித்து விளையாட்டை மீண்டும் துவக்கி யுள்ளது அவக்கேடானது.