india

img

வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைப்பு!

வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
நரேந்திரமோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு சிறுபான்மை இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறது. அதனொரு பகுதியாகவே, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவும் கொண்டு வரப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவை, ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார்.
இம்மசோதாவில் சொத்து குறித்து தீர்மானிக்கும் வாரியத்தின் அதிகாரத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு அடுத்தபடியாக நாட்டிலேயே அதிக அளவில் நிலத்தை வக்பு வாரிய வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (JPC) அனுப்புவதாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை உறுப்பினர்கள் 21 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேர் என மொத்தம் 31 பேர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.