india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாடு முழுவதும் மார்ச் 10 அன்று தேதி விவ சாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடு பட உள்ளதாக அறிவித்துள்ளனர். தில்லியில் போராட்டம் நடத்தும் முடிவில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்றும், மார்ச் 10 நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய  சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

பெங்களூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை பாஜக அரசியலாக்குவதாக கர்நாடக  துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சாடியுள்ளார்.

“கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  நாட்டில் வேலைவாய்ப்பின்மை நிலவு கிறது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மூலமாக சிறு தொழில்களை மோடி அழித்ததால், பாகிஸ்தான், பூடான், வங்தேசத்தைவிட இந்தியாவில் வேலை யில்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண் ணிக்கை அதிகமாக உள்ளது” என “இந்திய ஒற்று மைக்கான நீதி யாத்திரையில் (மத்தியப்பிரதேசம்) காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உரையற்றினார்.

தனது தாத்தாவுக்கு (முன்னாள் பிரதமர் சரண் சிங்) பாரத ரத்னா விருது கொடுத்ததால் “இந்தியா” கூட்டணியில் இருந்து ஓட்டம் பிடித்த ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி ஞாயிறன்று அமித்ஷா முன்னிலையில் பாஜக கூட்டணியில் இணைந்தது. 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 புள்ளிகள் அட்டவணையில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தைப் பிடித்தது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயின் பெண் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு  தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேர் தும்கா நீதி மன்றத்தில் ஞாயிறன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மண்ட லத்தின் தேசிய நெடுஞ்சாலை அதிகாரியாக இருக்கும் அரவிந்த் காலே நிலுவையில் உள்ள  பில்களை சரிசெய்வதற்காக ரூ.45 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஞாயி றன்று நாக்பூர் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலம் போபால் உள்ள 5 இடங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில், சோதனை முடிவில் அரவிந்த் காலேயை சிபிஐ கைது செய்தது.

பெங்களூரில் குண்டுவெடிப்புக்கு உள்ளான  ‘ராமேஸ்வரம் கபே’ உணவகம் மீண்டும் மார்ச் 8அன்று திறக்கப்படும் என அதன் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ராகவேந்திர ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

இம்பால்
மணிப்பூர் ஆயுதக் கொள்ளை வழக்கு
7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் 

பாஜகவின் இழிவான அரசிய லால் வடகிழக்கு மாநிலங்க ளில் ஒன்றான மணிப்பூர் கடந்த 11 மாதங்களாக பற்றி எரிந்து வரு கிறது. இந்த வன்முறைக்கு உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந் துள்ள நிலையில், பல லட்சம் மக்கள்  சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். வன்முறைக்கு காரணமான உயர்நீதி மன்ற தீர்ப்பை வாபஸ் பெற்ற பின்பும் மெய்டெய் மக்கள் அடுத்தகட்ட வன் முறையை கிளப்பி வருகின்றனர்.

இதனால் மணிப்பூரில் வன்முறை சம்  பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு  வன்முறையின் பொழுது பிஷ்ணுபூர்  காவல்நிலைய ஆயுத கிடங்கில் இருந்து  ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 7 பேர் மீது சிபிஐ  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள தாக ஞாயிறன்று மணிப்பூர் மாநில அர சுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித் துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகை அசாம்  மாநிலம் கவுகாத்தியில் உள்ள கம்ரூப்  பின் (மெட்ரோ) தலைமை நீதிமன்றத்தில்  சிபிஐ தாக்கல் செய்தது என தகவல் வெளி யாகியுள்ளது.

கொல்கத்தா
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் 
திடீர் ராஜினாமா

மேற்குவங்க மாநிலம் கொல் கொத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருப்பவர் அபி ஜித் கங்கோபாத்யாய். இவர் சமீபத்தில்  மேற்குவங்க மாநிலத்தில் கல்வி தொடர் பான பல்வேறு பிரச்சனைகள் குறித்த தீர்ப்புகளுக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அரசியல் உள்நோக்கத்துடன் அபிஜித் கங்கோபாத்யாயின் தீர்ப்புகள் இருந்ததாக அக்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், மார்ச் 5 அன்று தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக நீதிபதி அபிஜித் ஞாயிறன்று அறிவித்துள்ளார்.