india

img

பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணங்கள் கூடாதாம்!

முன்பெல்லாம் கட்சி பிரச்சாரக் கூட்டம் மற்றும் இந்துத்துவா நிகழ்ச்சி நிரல்களில் மட்டுமே பாஜக எம்பிக்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவது வழக்கம். ஆனால் நாடாளுமன்றத்திலேயே பாஜக எம்பிக்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது சமீபகாலமாக வாடிக்கையாகி விட்டது.

சமீபத்தில் நிறைவுபெற்ற மழைக்கால கூட்டத் தொடரில் பாஜக  எம்பி ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ்  கட்சியின் எம்பி டேனிஷ் அலியை மதத்தோடு (இஸ்லாமிய) ஒப்பிட்டு,  ஆபாசமான, அவதூறான கருத்துக் களை கூறி இழிவுபடுத்தினார். இதனை  கண்டிக்காமல் ஒன்றிய அமைச்சர்கள் ரசித்தனர். இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்  தொடரில் பாஜக எம்பி தரம்பீர் சிங், “பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணங்கள் கூடாது” என  இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை ஆத ரித்து மக்களவையில் பேசியுள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறிய தாவது, “காதல் திருமணங்கள் விவாக ரத்துக்கு வழி வகுக்கின்றன. பெற்றோ ரால் திருமணம் செய்து வைக்கப்படு வதே நாட்டின் நீண்டகால வழக்கமாக  இருந்து வருகிறது. இருவரின் சமூகப்  பிரிவுகளை பொறுத்தே திருமணங்கள் செய்து வைக்கப்பட வேண்டும். நாட் டின் கலாச்சாரத்தைக் காக்க, காதல் திருமணங்களில் பெற்றோரின் விருப்பம் கட்டாயமாக்கப்பட வேண்டும். காதல் திருமணத்தில் இரு வேறு பிரிவுகள் கலப்பதால் கிரா மங்களில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்  கின்றன. லிவ் இன் உறவுகள் (live in  relationships) இந்த நாட்டிற்குப் பிடித்த நோய், அவை சட்டத்திற்குப் புறம்பானதாக அறிவிக்கப்பட வேண் டும். முக்கியமாக காதல் திருமணம் செய்வதற்கு பெற்றோரின் சம்மதம் கட்டாயமாக்கப்பட வேண்டும்” என  பாஜக எம்பி தரம்பீர் சிங் பேசியுள்ளார். பாஜக எம்பி தரம்பீர் சிங்கின் பேச்சிற்கு  பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரி வித்து வருகின்றனர்.