india

img

சைவப் பொருட்களை விற்பனை செய்தால் அயோத்தியில் அனுமதி

பாஜக உத்தரப்பிரதேச மாநி லத்தின் அயோத்தியில் கடந்த 1992-ஆம் ஆண்டு  பாபர் மசூதியை இடித்து, அதே இடத்  தில் கட்டப்பட்ட ராமர் கோவில் ஜன வரி 22-ஆம் தேதி பிரதமர் மோடியின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு இடையே திறக்கப்பட்டது. 

ராமர் கோவில் அமைந்துள்ளதை காரணம் காட்டி ஆளும் மாநில பாஜக  அரசு மத கண்ணோட்டத்தில் அயோத்தி யில் பல்வேறு தடை விதித்துள்ளது. அதாவது அயோத்தி பஞ்ச் கோசி  மார்க் (15 கிமீ சுற்றளவு) பகுதிகளுக்  குள் இறைச்சி மற்றும் மது விற்ப னைக்கு கடுமையான தடைகளை விதித்துள்ளது. ஆனால் இந்த தடை அயோத்தி முழுவதும் செயல்படுத்த உள்ளதாக பல்வேறு தகவல் வெளி யாகி வரும் நிலையில், சைவப் பொருட்  களை மட்டும் விற்பனை செய்வதாக இருந்தால் அயோத்தியில் அனுமதி  தருவோம் என பிரபல அசைவ உணவு  நிறுவனமான கேஎப்சி-க்கு உ.பி., பாஜக அரசு நகைச்சுவை சாய்ஸ் ஒன்றை அளித்துள்ளது. 

இதுகுறித்து அயோத்தி நிர்வா கத்தின் அதிகாரியான விஷால் சிங்  கூறுகையில்,”மெனுவில் சைவப்  பொருட்களை மட்டுமே விற்பனை செய்தால் அமெரிக்காவைச் சேர்ந்த  கேஎப்சி விற்பனை நிலையத்தை அயோத்தியில் திறக்க இடம் அளிப் போம்” என அவர் கூறியுள்ளார்.

கேஎப்சிக்கு அசைவ உணவே அடையாளம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல துரித உணவு நிறுவனமான கேஎப்சி  தனது நிறுவன பெயரிலேயே அசைவ உணவான பிரைடு சிக்கனின் பெயரை கொண்டுள்ளது. அதாவது கேஎப்சி என்றால் கென்டக்கி பிரைடு சிக்கன் (KFC - Kentucky Fried Chicken) என்பதே  அதன் பெயர். கேஎப்சி சைவ உணவை தயாரித்தாலும் அந்நிறுவனத்தின் முக்கிய அடையாளம் அசைவ உணவே ஆகும். அந்நிறுவன கடைகளுக்கு செல்லும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அசைவ உணவை ருசிக்கவே செல்கின்றனர். அசைவ உணவிற்கும் கேஎப்சி-க்கும் இப்படி ஒரு தொடர்பு உள்ள நிலையில், அசைவ உணவை தவிர்த்து சைவ உணவை மட்டும் விற்பனை செய்வதாக இருந்தால் அயோத்திக்கு வரலாம் என  உத்தரப்பிரதேச பாஜக அரசு அளித்துள்ள  சாய்ஸ் பெரும் நகைப்பை ஏற்படுத்தி யுள்ளது.