புதுதில்லி, டிச. 22 - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி யிருந்தார்.
“47 ஆண்டுகளாக இல்லாத கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை யும், தென் மாவட்டங்களில் தற்போது வரலாறு காணாத வகையில் 100 ஆண்டு களில் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடராக அறி விக்க வேண்டும்” என்று முதல்வர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், வெள்ளியன்று புதுதில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன், தமிழக மழை வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று ஆணவத்து டன் தெரிவித்துள்ளார். “தேசியப் பேரிடராக அறி விப்பதற்கு சில வழிமுறைகள் உள்ள நிலையில், இதுவரை எந்த மாநி லத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை யும் பேரிடராக அறிவித்தது இல்லை; அதனால், தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிட ராக அறிவிக்க முடியாது” என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
ரூ. 14 ஆயிரத்து 500 கோடி குறித்து சமாளிப்பு
பிரதமர் மோடியைச் சந்தித்த போது, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங் களில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ. 7033 கோடியும், நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ. 12,659 கோடியும், திரு நெல்வேலி, தூத்துக்குடி, கன்னியா குமரி மற்றும் தென்காசி மாவட்டங் களின் தற்காலிக சீரமைப்பு பணிகளுக் காகவும், வாழ்வாதார உதவிக்காக வும், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2000 கோடியை அவசர நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முதல்வர் விடுத்திருந்தார்.
இந்நிலையில், “மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டிய இரண்டாவது தவணை டிசம்பர் 12 அன்றே, அதாவது முன்கூட்டியே வழங்கப்பட்டுவிட்டது. தென் மாவட்டங் களில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்படு வதற்கு முன்பே, ஒன்றிய அரசு, நிலு வைத் தொகையை வழங்கி விட்டது. அதாவது, இந்த ஆண்டு ஒன்றிய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 900 கோடியையும் வழங்கி விட்டது” என்று கூறியிருக்கும் நிர்மலா சீதா ராமன், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங் கள், தென்மாவட்டங்களின் வெள்ளப் பாதிப்புக்கான நிவாரண நிதி ரூ. 14 ஆயி ரத்து 659 கோடி பற்றி பற்றி வாய் திறக்க வில்லை. வழக்கமாக வழங்கப்படும் ரூ. 900 கோடியைக் காட்டி, அதுதான் அது என்று சாமர்த்தியமாக நழுவியுள்ளார்.
அரசியல் காழ்ப்புடன் தமிழக அரசு மீது விமர்சனம்
மேலும், வெள்ள மீட்பு மற்றும் நிவா ரண உதவிகள் வழங்கும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மீது விமர்சனங்களை யும் நிர்மலா சீதாராமன் வைத்துள்ளார்.
“வெள்ளம் பாதிக்கப்பட்டவர்களு க்கு தரும் 6 ஆயிரம் நிவாரணத்தை ஏன் ரொக்கமாக கொடுக்கின்றீர்கள்? வங்கி கணக்கில் செலுத்தலாமே? அரசு பணம் தானே அது? உங்க அப்பன் வீட்டு சொத்தோ, என் அப்பன் சொத்தோ இல்லையே? உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் பணம் செல்கிறதா? வெள்ளத் தடுப்பு நட வடிக்கைக்காக செலவு செய்த ரூ. 4,000 கோடி எங்கே போனது? 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் பின் என்ன பாடம் கற்றுக்கொள்ளப்பட்டது? தூத்துக் குடி, நெல்லைக்கு உடனடியாக முதல்வர் ஏன் செல்லவில்லை?” என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சனங்களை வைத்துள்ளார்.