india

img

உச்சநீதிமன்ற வாசலில் தீக்குளித்த இரண்டு பேர் 

உச்சநீதிமன்ற வாசலில் 2 பேர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி உச்சநீதிமன்றத்தின் டி எண் கொண்ட நுழைவாயில் பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் திடீரென 2 பேர் தங்கள் கையில் வைத்திருந்த பெட்ரோலை தங்கள் உடம்பில் ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். உடம்பெல்லாம் நெருப்பு பற்றிக் கொண்ட நிலையில் அலறி துடித்த அவர்களை, காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;