மகாராஷ்டிரா மாநிலம் மாலே கானில் முஸ்லிம் மக்கள் நிறைந்த பகுதியில் கடந்த 2008 செப்டம்பர் 29 அன்று நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். நூற் றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இந் துத்துவா அமைப்பை சேர்ந்த சாத்வி பிரக்யா சிங் தாக்கூரை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். குண்டுவெடிப்பு நிகழ்த்த பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் சாத்விக்குச் சொந்தமானது என்று தக வல் வெளியாகிய நிலையில், இந்த வழக்கு 2011இல் தேசிய புலனாய்வு முக மைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.
தற்போது இந்த வழக்கில் இறுதிக் கட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பிரக்யா சிங் தாக்கூர் மோடி அரசின் ஆதரவால் நீதிமன்ற விசார ணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், திங்களன்று நீதிமன்ற விசாரணையை புறக்கணித்து வரும் சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு எதி ராக ரூ.10,000 அபராதத்துடன் வாரண்ட் பிறப்பித்து மார்ச் 20க்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோடி உத்தரவிட்டார்.
இதனால்தான் பாஜக சீட் தரவில்லையா?
கடந்த 2019இல் சாத்வி பிரக்யா மத்தி யப் பிரதேசத்தின் போபால் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். ஒரு குண்டு வெடிப்பு குற்றவாளிக்கு பாஜக சீட் கொடுத்து எம்பியாக்கியது பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், எம்பியான உடன் பிரக்யா சிங் மத வன்முறையை தூண்டும் வகையிலும், மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே “உண்மையான தேச பக்தர்” என்று கூறியும் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பினார். ஆனால் மோடி அரசு அவரை நேரடியாக கண்டிக்கவில்லை.
இந்நிலையில், வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் அறி விக்கப்படவில்லை. அவருக்குப் பதி லாக போபால் தொகுதிக்கு முன்னாள் மேயர் அலோக் சர்மாவுக்கு பாஜக சீட் வழங்கியுள்ளது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியதால் தேர்தல் நேர சங்கடத்தை தவிர்க்கவே சீட் தராமல் பிரக்யா சிங்கை ஓரம்கட்டியுள்ளது.