ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்களன்று மாநிலங்க ளவையில் காஷ்மீர் விவகாரத் தில் முன்னாள் பிரத மர் நேரு தவறு செய்து விட்டதாக குற்றம் சாட்டினார். அமித்ஷா வின் இந்த கருத் துக்கு கண்டனம் தெரிவித்த காங்கி ரஸ் எம்பி ராகுல் காந்தி செய்தியா ளர்கள் சந்திப்பில் கூறியதாவது: “ஜவ ஹர்லால் நேரு தமது வாழ்க்கையையே நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். சுதந்தி ரப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டு கள் சிறையில் இருந்துள்ளார். அமித் ஷா வுக்கு வரலாறு தெரியாது. வரலாற்றை மாற்றி எழுத முயன்று கொண்டிருக்கும் அவருக்கு உண்மையான வரலாறு தெரிந்திருக்கும் என்று நான் எதிர்பார்க்க வில்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பு விவ காரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக அமித் ஷா வர லாறு தெரியாமல் இவ்வாறு பேசுகிறார். சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து பேசு வதற்கே பாஜக பயப்படுகிறது” என அவர் கூறியுள்ளார்.