தில்லியில் அரியவகை பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட 7 வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்திமுடித்துள்ளனர்.
ராஜஸ்தான் சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக அம்மாநில பாஜக மூத்த எம்எல்ஏ காளிசரண் சரப் நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பிம்பல் ஜோகோவிற்கு அருகே ஆட்டோ மீது மினிவேன் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட பலரது நிலைமைகவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டவர் மைதா
னப் பராமரிப்பாளர் ஒருவரின் மகன் தனஞ்சய் பாரிக் (21) என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் வண்ணப் புகை குப்பி
களை வீசியவர்கள், அழித்த முகநூல் கணக்கில் இருந்த தகவல்களை அறிய தில்லி போலீஸார் மெட்டா நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளனர்.
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் சிர்சி அருகே ஷால்மலா ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு -காஷ்மீரில் உள்ள லடாக்கில் திங்களன்று பிற்பகல் 3.48 மணியளவில் (ரிக்டர் அளவில் 5.5) நிலநடுக்கம் ஏற்பட்டது. மீண்டும் மாலை 4 மணியளவில் லடாக் அருகே கிஷ்த்வார்பகுதியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற் பட்டது. ஒரே பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் லடாக் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். நிலநடுக்க சேதம் தொடர்பாக மாலை 6 மணி வரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜலான் மாவட் டத்தில் உள்ள கைத்தேரி சுங்கச்சாவடி அருகே மினிவேன் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.