india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக பல்லா யிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. கோழிகள் உயிரிழந்த பண்ணைகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளில் கோழி இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளை திறக்க  தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டி, தில்லி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். மொத்த முள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு 62 இடங்களும், பாஜகவுக்கு 8 இடங்களும் உள்ளன.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பகவங்கோலா சட்டமன்ற உறுப்பினர் இட்ரிஸ் அலி (73 வயது - திரிணா முல் காங்கிரஸ்) வெள்ளியன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார்.

 பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்த கருத்துகள் தொடர்பான கிரிமினல் அவதூறு வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால், சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுக்களை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஐஐடி மாணவர் தற்கொலை
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்தவர் சஞ்சய் நெர்கர் (24). இவர்  தில்லி ஐஐடியின் மாணவர் விடுதியில் தங்கி  எம்.டெக் படித்து வந்தார். சஞ்சய் நெர்கரை  வியாழனன்று அவரது குடும்பத்தினர் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் சஞ்சய் நெர்கர் போனை எடுக்காததால், குடும்பத்தினர் நண்பர்களுக்கு தகவல் தெரி வித்துள்ளனர். நண்பர்கள் விடுதி அறைக்கு (துரோணாச்சார்யா விடுதி - அறை எண் 757) சென்று பார்க்க சஞ்சய் நெர்கர் தூக்கில்  தொங்கியபடி பிணமாகக் கிடந்தார். போலீ சார் சஞ்சய் நெர்கரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசார ணையை தொடங்கியுள்ளனர். மாணவர் தற்கொலை காரணமாக தில்லி ஐஐடியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.