மோடியின் பேச்சில் உண்மை, நேர்மை இல்லை. யதார்த்தத்தின் அடிப்படையில் பேசாத ஒரு பிரதமரை நான் இதுவரை பார்த்ததில்லை. நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட முன்னாள் பிரதமரின் செயல்பாடுகள் புதிய இந்தியாவை உருவாக்கும்படி இருந்தன. ஆனால் தற்போதைய பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர்களை தாக்கும் வேலைகளில் மட்டுமே குறியாக இருக்கிறார்.