india

img

இந்தியாவில் சிறுபான்மையினர் என்ற பாகுபாடு கிடையாதாம் மக்களவையில் ஒன்றிய அமைச்சர் பேச்சு

மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டில் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதி ரான தாக்குதல் சம்பவங்கள் மிக மோச மான அளவில் அதிகரித்து வருகின்றன. தற்போது கூட மசூதிகள் இந்துக் கோ வில்களை இடித்து கட்டப்பட்டது எனக் கூறி சம்பல், ஆஜ்மீர் உள்ளிட்ட இடங்க ளில் பாஜக - ஆர்எஸ்எஸ் - பஜ்ரங் தளம் - விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்டவை வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி, அமித் ஷா கூட மக்களவை, சட்டமன்ற தேர்தல் பிரச்சா ரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சை கக்கி வருகின்றனர்.

ஆனால் இந்தியாவில் சிறுபான்மை யினர் என்ற பாகுபாடு கிடையாது என  நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அப்பட்டமாக பொய் கூறி வருகிறது. அரசி யலமைப்புச் சட்ட விவாதத்தின் பொழுது மக்களவையில் நாடாளுமன்ற விவகா ரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “ஐரோப்பிய நாடுகளில், பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலை, வங்க தேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக என்ன நடந்தது என உங்களுக்குத் தெரியும். திபெத், மியான்மர், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் சிறு பான்மையினருக்கு எதிரான ஒடுக்கு முறை அல்லது ஏதேனும் பிரச்சனை எழுந் தால், அவர்கள் முதலில் பாதுகாப்பு கோரும் நாடு இந்தியா தான். 

அவ்வாறு இருக்க இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று ஏன் சொல்லப்படுகிறது. நாட்டின் நன்மதிப்பை பாதிக்கும் இது போன்ற விஷயங்களில் கவனமாகப் பேச வேண்டும். இதை நான் எந்த ஒரு கட்சிக் காகவும் கூறவில்லை. இதை நான் நாட்டுக்காகவே சொல்கிறேன். உலகின் பிற பகுதிகளில் உள்ள சிறுபான்மையி னருக்கு வாக்களிக்கும் உரிமை எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்தியாவில் சிறு பான்மையினருக்கு எதிரான பாகுபாடு இல்லை. ஜனநாயகத்தில் இந்தியாவு டன் யாராலும் போட்டியிட முடியாது” என உளறியுள்ளார்.