மக்கள் விரோதக் கொள்கை யுடன் கடந்த 10 ஆண்டுக ளாக நாட்டை பாடாய்ப் படுத்தி வரும் பாசிச பாஜக ஆட்சி யை வீழ்த்த அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து “இந்தி யா” என்ற பெயரில் புதிய கூட்டணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் உதய மாகியது. “இந்தியா” கூட்டணி உரு வாக்கத்திற்கு முக்கிய பங்காற்றிய ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் பாஜகவின் மிரட்டல் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் (ஆர்ஜேடி), பீகார் முன்னாள் முதல்வருமான தேஜஸ்வியின் அசுர வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் மாநில அளவில் “மகா” கூட்டணி யில் இருந்தும், தேசிய அளவில் “இந்தியா” கூட்டணியில் இருந் தும் ஓட்டம் பிடித்தார். அதுவரை ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரி கள் அடங்கிய மகா கூட்டணியில் முதல்வராக இருந்த நிதிஷ் குமார், மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்து பீகார் முதல்வராக பொறுப்பேற்றார்.
பாஜக கூட்டணியில் இணைந்த பின்பு நிதிஷ் குமார் டம்மியாக்கப் பட்டார். துணை முதல்வராக இருக் கும் பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் மட்டுமே பீகார் மாநில ஆட்சி அதி காரத்தை கவனித்து வரும் நிலையில், நிதிஷ் குமார் பொம்மை முதல்வராக உள்ளார். மேலும் மக்க ளவை தேர்தலுக்கான தேசிய ஜன நாயக கூட்டணி தொகுதி பங்கீட்டில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு (16), பாஜகவை (17) விட குறைவான தொகுதியே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நிதிஷ் குமார் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பாஜகவுடனான நெருக் கத்தை நிதிஷ் குமார் உள்ளிட்ட ஐக்கிய ஜனதா தள கட்சியினர் குறைத்துக் கொண்டனர்.
“இந்தியா” கூட்டணிக்கான மக்கள் ஆதரவு அலையால் மிரண்ட நிதிஷ்
“இந்தியா” எழுச்சியை கண்டு மிரண்ட பாஜக, கூட்டணியில் குழப் பத்தை ஏற்படுத்த நிதிஷ் குமாரை மிரட்டியும், கர்ப்பூரிதாக்குருக்கு பாரத ரத்னா விருது அளித்தும் தங்கள் பக்கம் இழுத்தது. நிதிஷ் குமாரை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டால் “இந்தியா” கூட்டணி சிதைந்து விடும் என்ற பாஜக போட்ட கணக்கு சுக்குநூறாக நொறுங்கி யது. காரணம் நிதிஷ்குமார் சென்ற பிறகுதான் “இந்தியா” கூட்டணி பலமாக வலுவடைந்தது. கூட்ட ணியில் உள்ள 40க்கும் மேற்பட்ட கட்சிகள் வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தினர். தற்போது மக்களவை தேர்தலில் நாடு முழு வதும் “இந்தியா” கூட்டணிக்கான ஆதரவு அலை வீசி வரும் நிலை யில், இதுவரை நடைபெற்ற 4 கட்ட மக்களவை வாக்குப்பதிவில் 250 தொகுதிகளை கைப்பற்றும் அளவிற்கு “இந்தியா” கூட்டணி வலுவான ஆதிக்கம் செலுத்தி வரு வதாக கருத்துக்கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங் கிரஸ் - இடதுசாரிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணிக்கு மக்கள் பிரம்மாண்ட ஆதரவு அளித்து வரு வதால் கலக்கமடைந்த நிதிஷ் குமார் பாஜகவை விட்டே ஒதுங்க ஆரம்பித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கூட்டணி வைத்து விட்டோம், தேர்தலும் நடந்து கொண் டிருக்கிறது என்ற எண்ணத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து வேண்டா வெறுப்பாக நிதிஷ் குமார் பிரச்சாரம் செய்தது சமூக வலைத்தளங்களில் ஆதாரங்க ளோடு வீடியோவும் வெளியாகி நாடு முழுவதும் டாப் டிரெண்ட்ங் கில் வைரலானது.
மேலும் பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங் கிரஸ் - இடதுசாரிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணிக்கு மக்கள் பிரம்மாண்ட ஆதரவு அளித்து வரு வதால் கலக்கமடைந்த நிதிஷ் குமார் பாஜகவை விட்டே ஒதுங்க ஆரம்பித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கூட்டணி வைத்து விட்டோம், தேர்தலும் நடந்து கொண் டிருக்கிறது என்ற எண்ணத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து வேண்டா வெறுப்பாக நிதிஷ் குமார் பிரச்சாரம் செய்தது சமூக வலைத்தளங்களில் ஆதாரங்க ளோடு வீடியோவும் வெளியாகி நாடு முழுவதும் டாப் டிரெண்ட்ங் கில் வைரலானது.
“இந்தியா” கூட்டணியை விமர்சிக்காத நிதிஷ் குமார்
பீகாரில் உள்ள 40 தொகுதிக ளில் 7 கட்டமாக தேர்தல் நடை பெற்று வருகிறது. இதுவரை 4 கட்ட தேர்தலில் 19 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில், மக்களவை தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய பின்பு நிதிஷ் குமார் “இந்தியா” கூட்ட ணியை விமர்சிப்பதையே நிறுத்தி விட்டார். முதல்கட்ட வாக்குப் பதிவில் “இந்தியா” கூட்டணியை ஒன்றிரண்டு வார்த்தைகள் மூலம் வசைபாடிய நிதிஷ் குமார், அடுத்த 3 கட்ட தேர்தலில் வாய்திறக்க வில்லை. மேலும் ஐக்கிய ஜனதா தள முக்கிய தலைவர்களான கே.சி.தியாகி உட்பட யாரும் “இந்தியா” கூட்டணிக்கு எதிராக ஒன்றிரண்டு வார்த்தைகளை கூட உதிர்க்கவில்லை. இத்தகைய செயல்பாடுகளால் பாஜகவை நிதிஷ் குமார் புறக்கணிப்பது தெளி வாக வெளிச்சத்திற்கு வந்துள் ளது.
7 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின் அல்லது தேர்தல் முடிவு வெளியான பின்பு நிதிஷ் குமார் பாஜக கூட்டணி தொடர்பான இறுதி முடிவை எடுக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.