india

img

சமையல் எண்ணெய்களின் இறக்குமதி மீதான வரியை உயர்த்தியது ஒன்றிய அரசு

     புதுதில்லி, செப்.14- சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 20% உயர்த்தி ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  இந்திய மக்களால் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட தாவர எண்ணெய்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துதான் சந்தைகளில் விற்கப்படுகிறது. 
இந்நிலையில் ஏற்கனவே இதன்மீதான வரிகள் அதிகமாக இருப்பதால் சமையல் எண்ணெய்யின் விலை  அதிகமாகத்தான் உள்ளது. தற்போது 20% அவரை இறக்குமதி மீதான வரியை அதிகரித்திருப்பதால் சில்லறை விலையில் ஒரு லிட்டருக்கு ரூ.25 வரை சமையல் எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
கச்சா பாமாயில், கச்சா சோயா எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் இறக்குமதி வரி 5.5% இருந்து 27.5% ஆகவும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரி 13.75% இல் இருந்து 35.75% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
   இதுபோன்று பண்டிகை காலங்களில் சமையல் எண்ணெய்களில் விலையை உயர்த்துவது பிரச்சனையாக உள்ளது என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.