அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மதச்சார்பின்மையை கேலிக்குள்ளாக்குவதாக உள்ளது. தற்போது மசூதி உள்ள இடத்தில் ஒருகாலத்தில் இந்து கோவில் இருந்ததாக நாடு முழுவதும் வழக்குகள் தொடரப்படுவதற்கு அயோத்தி தீர்ப்பே காரணம்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன்
மக்கள் நலன் பற்றியோ, வேலை வாய்ப்பு மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சனைகளை பற்றியோ பேசினால் பாஜக திசைதிருப்பும் வேலையை மட்டுமே செய்கிறது. பாஜகவின் திசை திருப்பும் வேலையால் மக்கள் மதத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்
உலகிலேயே அதிக பொய்யான செய்திகள் பரவும் நாடு இந்தியா என ஆய்வின் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளது. பாஜக அரசு நாட்டை எங்கு கொண்டுபோய் உள்ளது பார்த்தீர்களா? பொய்களை பரப்புவதில் உலகிலேயே ‘நம்பர் 1’ ஆக்கிவிட்டது இந்தியா.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
இரண்டு நாள் பொறுத்திருங்கள். மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜக எப்படி வென்றது என்பதற்கான ஆதாரம் எனக்கு கிடைத்துவிட்டது. பாஜக வெற்றி பெற செய்த மோசடிகளை அம்பலப்படுத்துவேன்.
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்
புதுதில்லி
தோல்வி பயம் எதிரொலி
தில்லியில் வாக்காளர்களை நீக்க பாஜக மனு
தோல்வி பயம்காரணமாக தில்லியில் தேர்தல் ஆணை யத்தின் உதவியுடன் வாக்காளர்களை நீக்கும் வேலையை தொடங்கியுள்ளது பாஜக.
இந்நிலையில், தில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப் பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், “சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ளதால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வாக்காளர்களை நீக்க பாஜக இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித் துள்ளது” என குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகை யில், “தில்லியின் சாக்தாரா, ஜனக்புரி, லக்ஷ்மி நகர் என பல்வேறு தொகுதி களில், ஒவ்வொரு தொகுதிகளுக்கும் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை நீக்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக விண்ணப் பித்துள்ளது.
சாக்தாராவில் வெளியாட்கள் எனக் கூறி 11,018 வாக்காளர்களின் பெயர்களை நீக்க பாஜக விண்ணப்பித்துள்ளது. ஆனால் விண்ணப்பத்தை நாங்கள் குறுக்கு சோதனை செய்தபோது, 75% பேர் இன்னும் அங்கு வசிக்கின்றனர் என்பது உறுதியாகியுள்ளது. தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தில் பாஜக இவ்வாறு சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுதில்லி
“மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் வரவேண்டும்”
வன்முறையால் பாதிக்கப்ப ட்டுள்ள மணிப்பூருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள்ளாவது பிரதமர் மோடி நேரில் வர வேண்டும் என அம்மாநிலத்தின் “இந்தியா” கூட்டணி யைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அர சியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து மணிப்பூர் மாநிலத்தின் “இந்தியா” கூட்டணிக் கட்சி கள் கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில், “மணிப்பூரில் நடைபெற்று வரும் வன் முறை சம்பவங்கள் 2 ஆண்டுகளை நெருங்கியுள்ளது. தற்போது வரை, ஒருமுறை கூட பிரதமர் ஆகிய தாங்கள் எங்களுடைய மாநிலத்திற்கு வருகை தந்து இயல்பு நிலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை. உலக நாடுகள் அனைத்திற்கும் ஆர்வமுடன் சென்றும், பல நாடுகளின் பிரச்சனை களில் கவனம் செலுத்துவதாக சொல்லிக் கொள்ளும் தாங்கள் சொந்த நாட்டில் உள்ள ஒரு மாநிலம் வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொழுது, தற்போது வரை வருகை தராதது விந்தையாக உள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.