புதுதில்லி, அக். 3 - “சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஈஷா யோகா மையத்திற்கு எதிராக தமி ழக காவல்துறை மேற்கொண்டு விசார ணை நடத்தக் கூடாது” என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (அக்டோபர் 3) தடை விதித்தது.
“தேவைப்பட்டால் ஈஷா மையத்தில் உள்ள நபர்களிடம் நீதித்துறை அதி காரி மூலம் விசாரணை நடத்தலாம்” என்று கூறியிருக்கும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஹேபியஸ் கார்பஸ் மனுவை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றியும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தமது மகள்களை ஏமாற்றி ஈஷா மையத்தில் அடைத்து வைத்துள்ள தாக 69 வயதான தந்தை ஒருவர் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஜக்கி வாசுதேவ் மற்றும் ஈஷா அறக்கட்டளை மீது பதிவு செய்யப் பட்டுள்ள பாலியல் வழக்கு, காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கு உட்பட அனைத்து கிரிமினல் வழக்குகள் குறித்தும் அறிக்கை அளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் சில நாட்களுக்கு முன்பு உத்த ரவு பிறப்பித்தது. காவல்துறை விசார ணைக்கும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, ஈஷா அறக்கட்டளையானது, வேகவேகமாக உச்ச நீதிமன்றத்திற்கு ஓடியது. ஈஷா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி, “ஈஷா விவகாரம் மதச் சுதந்திரம் தொடர்பான பிரச்சனை, இது மிகவும் அவசரமான மற்றும் தீவிரமான வழக்கு. சத்குரு மிகவும் மதிக்கப்படுபவர் மற்றும் லட்சக்கணக்கான பின்தொடர்பவர் களைக் கொண்டவர்; எனவே இந்த வழக்கை இன்றே அவசரமாக விசா ரிக்க வேண்டும்” என்று கூறினார்.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வும் அதனை ஏற்றுக் கொண்டு, “இதுபோன்ற (ஆன்மீகத் தலம்) இடத்திற்குள் காவல்துறை யையோ அல்லது ராணுவத்தையோ அனுமதிக்க முடியாது...” என்றது டன், “எந்த முதன்மையான காரண மும் இல்லாமல் காவல்துறை விசார ணைக்கு பிறப்பிக்கப்பட்ட உயர் நீதி மன்ற உத்தரவை நிறுத்தி வைப்பதாக வும், மேலும் போலீசார் எந்த நட வடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வும் அதனை ஏற்றுக் கொண்டு, “இதுபோன்ற (ஆன்மீகத் தலம்) இடத்திற்குள் காவல்துறை யையோ அல்லது ராணுவத்தையோ அனுமதிக்க முடியாது...” என்றது டன், “எந்த முதன்மையான காரண மும் இல்லாமல் காவல்துறை விசார ணைக்கு பிறப்பிக்கப்பட்ட உயர் நீதி மன்ற உத்தரவை நிறுத்தி வைப்பதாக வும், மேலும் போலீசார் எந்த நட வடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
முன்னதாக இந்த வழக்கில், ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஈஷா விஷயத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்” என்றார். அதேநேரம், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, “ஆசிரமத்துக்குச் சென்ற காவல் துறைக் குழுவில், சுகாதார அதிகாரி கள் மற்றும் குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்களும் இருந்தனர்” என்றது டன், “எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கச் சொல்லி ஆசிரம உறுப்பி னர்களை போலீசார் மிரட்டிய தாக கூறப்படும் குற்றச்சாட்டு களில் உண்மையில்லை” என்றும் தெரிவித்தார்.