மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத் திற்குட்பட்ட சந்தேஷ்காளி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஷேக் ஷாஜகான் தனது கூட்டாளிகளுடன் பெண்களின் நிலத்தை அபகரித்தும், பாலியல் வன் முறைக்கு உள்ளாக்கியதாகவும் குற் றச்சாட்டு எழுந்தது. பெண்கள் நேரடி யாக குற்றம் சாட்டியதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல் ஆளாக முன் னின்று போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஷேக் ஷாஜகான் கடும் எதிர்ப்புக்கு இடையே சுமார் 50 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு மக்களவை தேர்தல் நெருங்கியதால் சந்தேஷ்காளி விவ காரத்தை அரசியல் ஆதாயப் பொரு ளாக எடுத்துக்கொண்ட பாஜக வன் முறை மூலம் போராட்டம் நடத்தி 24 பர் கானாஸ் மாவட்டம் முழுவதும் பதற் றத்தை ஏற்படுத்தியது. மேலும் வன் முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூ ருக்குச் செல்லாத தேசிய மகளிர் ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணை யங்கள் ஒன்றிய பாஜக அரசின் உத்த ரவின் பேரில் சந்தேஷ்காளிக்கு மின் னல் வேகத்தில் வந்து விசாரணை மேற்கொண்டு குடியரசுத் தலைவரி டம் அறிக்கை சமர்ப்பித்தன. அந்த அறிக்கையில் சந்தேஷ்காளி பாலியல் விவகாரத்தை முன்வைத்து மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
மேலும், “ஆணையங்களின் விசா ரணை மற்றும் அறிக்கையை முன் வைத்து சந்தேஷ்காளி பாலியல் விவகாரத்தை நாங்கள் தான் கண்டு பிடித்தோம், தற்போது நாங்கள் தான் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக முன் நிற்கிறோம், மோடி அரசு மூலம் நட வடிக்கை மேற்கொண்டு வருகி றோம்” என பாஜகவினர் மார்தட்டிக் கொண்டனர். “கோடி மீடியா” ஊட கங்களும் தங்கள் பங்கிற்கு சந் தேஷ்காளி பாலியல் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உத வும் கட்சியாக பாஜகவை சித்தரித்து செய்தி வெளியிட்டன. மக்களவைத் தேர்தல் வேலைகள் துவங்கியவுடன் சந்தேஷ்காளி பாலியல் வன்முறை யால் பாதிக்கப்பட்ட பெண் என்று கூறப்படும் ரேகா பத்ரா என்ற பெண்ணை பசிர்ஹத் மக்களவை தொகுதியின் வேட்பாளராக பாஜக நிறுத்தியது. இவரை வைத்து “பெண் சக்தி” என்று கூறி பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், “சந்தேஷ்காளி பாலியல் வன்கொடுமை விவகாரம் செயற்கையாக (இது அடிப்படையில் ஒரு ஸ்டிங் ஆபரேஷன்) உருவாக்கப் பட்டது. சந்தேஷ்காளியில் பாலியல் வன்கொடுமை எதுவும் அரங்கேற வில்லை. பணத்திற்காகவும், ஒரு சில ஆதாயங்களுக்காகவும் பெண் கள் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது” என சந் தேஷ்காளி பாஜக நிர்வாகி கங்காதர் கயல் பேசிய வீடியோ வெளியாகி யுள்ளது.
தற்போது இந்த வீடியோ நாடு முழு வதும் டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், மேற்குவங் கத்தை ஆளும் திரிணாமுல் காங்கி ரஸ் கட்சி,”சந்தேஷ்காளி பாலியல் வன்கொடுமை சம்பவம் என்பது பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து ஆதி காரியின் அறிவுறுத்தலின் பேரில் பொய்யாக ஏற்பாடு செய்யப்பட்டது” என குற்றம்சாட்டியுள்ளது.
பாஜக நழுவல்
அரசியல் ஆதாயத்திற்காக பாலி யல் வன்முறையை செயற்கையாக உருவாக்கிய பாஜகவின் கள்ளத் தனம், தனது சொந்த கட்சியின் நிர் வாகி மூலம் அம்பலமாகியுள்ளது நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், பாஜகவிற்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஆனால் மேற்கு வங்க தலைவர் சுவேந்து ஆதிகாரி,”சந்தேஷ்காளி ஸ்டிங் வீடியோ உண்மையானது அல்ல. உண்மையை திரித்து கூற லாம். இறுதியில் உண்மையே வெல் லும்” என நழுவியுள்ளார்.