2022-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி ராஷ்ட் ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி ஆகிய கட்சிகளுடன் இணைந்து “மகா கத் பந்தன்” என்ற பெயரிலான கூட்டணி ஆத ரவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றர் நிதிஷ் குமார். துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி (லாலு மகன்) பொறுப்பேற்ற நிலையில், கடந்த ஒன்றரை வருடமாக கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் என பல்வேறு அதிரடி நடவடிக்கையில் கள மிறங்கி பல்வேறு நலத்திட்டங்களை செய்து பீகார் மாநில மக்களின் நன்மதிப்பை பெற் றுள்ளார். முக்கியமாக குறுகிய காலத்தில் 4.5 பேருக்கு வேலை அளித்து பீகார் மட்டுமின்றி தேசிய அளவில் 34 வயது இளைஞரான தேஜஸ்வி கவனம் ஈர்த்துள்ளார். கவனத்தை ஈர்த்தார். பீகார் இளைஞர்கள் அவரை தலை வராக பின்பற்ற தொடங்கினர். இதனால் பீகா ரில் தனது தந்தை லாலு பிரசாத்தைப் போலவே தேஜஸ்வியும் செல்வாக்கு மிக்க நபராக வலம் வர தொடங்கினார். தேஜஸ்விவின் வளர்ச்சி, மக்களின் ஆதரவால் நடுங்கிய நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவிடம் பதுங்கியுள்ளார்.
28 வருடமாக சந்தர்ப்பவாத அரசியலிலேயே பிழைப்பு நடத்தும் நிதிஷ்
நிதிஷ் குமார் தனது ஆரம்பகால கட்சியான சமதாவின் 7 எம்எல்ஏக்களுடன் 1996-ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். அதன்பிறகு பாஜக வாஜ்பாய் அரசில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் பதவிகளில் இருந்த நிதிஷ் குமார், 2000-ஆம் ஆண்டில் 7 நாட்கள் பீகார் முதல்வரானார்.
ஜூன் 2013-இல் பாஜகவுடனான கூட் டணியை முறித்து, அரசியல் விபத்தால் 2014-15இல் 10 மாதங் கள் மீண்டும் பீகார் முதல்வர் பதவி யில் அமர்ந்தார். 2014 மக்களவை தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வியை சந்திக்க, ஜூன் 2015-இல் ஆர்ஜேடி, காங்கி ரஸ் கூட்டணி அமைத்து முதல்வ ரான நிதிஷ் குமார், ஜூலை 2017- இல் கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தார்.
ஆகஸ்ட் 2022இல் பாஜகவை கைவிட்டு ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் உடன் கூட்டணி அமைத்த நிதிஷ் குமார் தற்போது மீண்டும் பாஜக உடன் இணைந்துள் ளார். தனது 28 வருட அரசியல் வாழ்க்கையில் சந்தர்ப்பவாத அரசி யலிலேயே பிழைப்பு நடத்தி வரு கிறார் நிதிஷ்.
வேலை செய்யாதவர்: ஆர்ஜேடி விமர்சனம்
ஆர்ஜேடி தலைவரும், முன்னாள் துணை முதல்வரு மான தேஜஸ்வி கூறுகையில், “நிதிஷ் குமார் ஒரு சோம்பேறி முதல்வர் ஆவார். அவர் எங்களுடன் கூட்டணியாக இருந்த பொழுது அனைத்து வேலைகளையும் நாங்கள்தான் செய்தோம். நிதிஷ் ஒரு வேலையும் செய்ய வில்லை. நாங்கள் செய்த பணிகள் போல பீகாரில் இதுவரை செய்யவில்லை என்பதால் நிதிஷ் பாஜகவிடம் சென்றுள் ளார்” என அவர் கூறியுள்ளார்.
நிதிஷ் குமார் வெளியேறியது “இந்தியா” கூட்டணிக்கு லாபம்: திமுக
நிதிஷ் குமார் பீகார் அரசியலின் முக்கிய மூத்த தலைவ ராக இருந்தாலும், அவர் நம்பகத்தன்மையை முற்றிலும் இழந்துவிட்டார். பொதுவாக ஒரு தலைவருக்கு நேர்மையும் நம்பகத்தன்மையும் மிகவும் முக்கியம்.ஆனால் நிதிஷ் குமா ருக்கு நேர்மை இல்லை. “மகாகத் பந்தன்” மற்றும் “இந்தியா” கூட்டணியில் இருந்து முதல்வர் நிதிஷ்குமார் வெளியேறி, பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அக்கட்சிக்கு தான் இழப்பு. “இந்தியா” கூட்டணிக்கு ஆதாயம்தான் கிடைக்கும். நிதிஷ் குமாரின் இந்த துரோகத்தை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என திமுகவின் செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
குப்பை மீண்டும் குப்பைத் தொட்டிக்குள்: ரோகிணி
நிதிஷ் குமார் “இந்தியா” மற்றும் “மகாகத் பந்தன்” கூட்டணி யில் இருந்து விலகிய விவகாரம் தொடர்பாக ஆர்ஜேடி தலைவருமான லாலுவின் மகளான ரோகிணி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறுகையில்,”குப்பை மீண்டும் குப்பைத் தொட்டிக்குள் செல்கிறது. இதனால் குப்பை குழுவில் மேலும் துர்நாற்றமே வீசும்” என அவர் கூறியுள்ளார்.
“இந்தியா” கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே அவசர ஆலோசனை
நிதிஷ் குமார் பாஜகவில் கரைந் துள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக் கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி, ராஷ்ட் ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், திரிணாமுல் காங்கி ரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகி யோரிடம் தொலைபேசி வாயிலாக அவசர ஆலோசனை மேற்கொண் டுள்ளார். ஆலோசனைக்கு பின்பு அவர் கூறுகையில், “சீத்தாராம் யெச்சூரி, மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ் ஆகியோரிடம் பேசி னேன். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் இருந்தால்தான் பாஜக வுக்கு நல்ல சவாலைக் கொடுக்க முடியும், “இந்தியா” கூட்டணியும் நமது நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும். யாரும் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன் எனக் கூறினேன். அதற்கு அவர்கள் நாம் ஒன்றுபட்டு நல்ல முறையில் போராடுவோம் எனக் கூறியுள்ளனர்” என அவர் கூறினார்.