india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சாக்லேட் தயாரிப்பின் மூலப்பொருளான கோகோ பீன் விலை கடந்த ஓராண்டில் மட்டும் 200 சதவீதம் உயர்வு கண்டிருப்பதால், சாக்  லேட் விலையை உயர்த்த அதன் தயாரிப்பு நிறு வனங்கள் விரைவில் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை  கண்டித்து தில்லி ஐடிஓ பகுதியில் ஆம் ஆத்மி  தலைவர்கள், தொண்டர்கள் போராட்டம் நடத்தி னர். இந்த போராட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த்மானும் பங்கேற்றார்.

கைது நடவடிக்கையின் பொழுது தில்லி காவல் உதவி ஆணையர் ஏ.கே.சிங் என்பவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 

மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட தெலுங் கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் விசாரணைக் காவலை மார்ச் 26 வரை நீட்டித்து தில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை 5 நாள் காவல் கோரிய நிலையில் 3 நாட்கள் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தில் தகுதி நீக்கம் செய்யப் பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரும் சனி யன்று பாஜகவில் இணைந்தனர்.

தில்லி ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு செல் லும் சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறை யிடப்படும் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் தெரி வித்துள்ளனர்.

தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் சமாஜ்வாதி கட்சியுடனான உறவை ஜன்வாடி கட்சி (சோசலிஸ்ட்) துண்டித்தது.

தேர்தல் முடியும் வரை கர்நாடகாவில் நடிகர்  சிவராஜ்குமாரின் திரைப்படங்கள் வெளி யிட தடை விதிக்க வேண்டும் என பாஜக சார்பில்  தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விதிகளின்கீழ் இயங்காத 20 பள்ளிகளின் உரிமத்தை நீக்கியுள்ளதாக மத்திய இடை நிலைக் கல்வி வாரியத்தின் செயலாளா் ஹிமான்ஷு குப்தா தெரிவித்துள்ளார்.

தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது  செய்யப்பட்ட அரவிந்தோ பார்மா இயக்குநரி டம் பாஜக ரூ.55 கோடி நன்கொடை பெற்றது. ரூ.55 கோடி பாஜகவுக்கு நன்கொடை வழங்கிய பின் அரவிந்தோ பார்மா இயக்குநர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மதுபான கொள்கை வழக்கு குற்றவாளியிடம் ரூ.55 கோடியை பாஜக பெற்றது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் தர வேண்டும் என்று ஆம் ஆத்மி கோரிக்கை விடுத்துள்ளது.