india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மியான்மரில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோ தமாக குடியேறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், ஞாயி றன்று திரிபுரா தலைநகர் அகர்தலா ரயில் நிலை யத்தில் மியான்மரைச் சேர்ந்த 3 பேர் கைது செய்  யப்பட்டனர்.

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபேஷ் பாகேல் மீது சத்தீஸ்கர் பாஜக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவ காரம் தொடர்பாக மக்களவை தேர்தலுக்கு முன் பூபேஷ் பாகேலை கைது செய்ய அம்மாநில பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநில பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான ரஞ்சித்  ரெட்டி கட்சியில் இருந்து விலகியுள்ள நிலையில், விரைவில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மக்கள் பிரதிநிதிகள் யாரும் தொகுதி மேம் பாட்டு நிதியில், புதிதாக எந்த பணிகளையும் மேற்  கொள்ளக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம்  அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் நடைமுறைக்கு முன் தொடங்கிய பணிக்கு புதிதாக நிதி ஒதுக்க அனு மதி இல்லை எனவும், தேர்தல் அறிவிப்புக்கு முன்பு  தொடங்கப்பட்ட பணிகளை செய்யவும் வழிகாட்டு  நெறிமுறை வழங்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தோல்வி பயத்தால்  பாஜக ஆள்பிடி வேலையில் தீவிரமாக  களமிறங்கியுள்ள நிலையில், உத்தரகண்டை சேர்ந்த  காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர சிங் பண்டாரியை தங்கள் பக்கம் வளைத்தது பாஜக. இதே போல மகா ராஷ்டிராவில் “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ்) கட்சியின் எம்எல்சி  ஆம்ஷ்யா, சிவசேனா ஷிண்டே பிரிவுக்கு ஓட்டம்  பிடித்தார். சிவசேனா ஷிண்டே பாஜக கூட்டணி யில் அங்கம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், திருப்பதி ஏழுமலை யான் கோவிலில் 3 மாதங்களுக்கு தரிசன முறை யில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விஐபி தரிசன விதிமுறைகளில் திருப்பதி தேவஸ்தா னம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.  அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரி சனத்திலோ அல்லது தங்கும் இடத்திலோ இனி  எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்  படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திர ஊழல் விவகாரத்தில் பிரதமர்  மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷா வும் பதில் சொல்ல வேண்டும் என காங்கிரஸ் பொதுச்  செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கோரியுள்ளார்.

புதுதில்லி
கெஜ்ரிவாலுக்கு 
மீண்டும் சம்மன்

மக்களவை தேர்தலுக்கு முன்பு தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர விந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை மூலம் கைது செய்ய மோடி அரசு மிக  தீவிரமாக களமிறங்கியுள்ளது. தில்லி மது பான கொள்கை வழக்கு தொடர்பாக அம லாக்கத்துறை, இதுவரை 8 முறை சம்மன்  அனுப்பி இருந்தது. குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாமல் அமலாக்கத்துறை சம்மன் அனுப்புகிறது என கெஜ்ரிவால் 8 சம்மனையும் புறக்கணித்தார். சம்மன்  புறக்கணிப்பு தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கு தொடர்பாக தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில்  சனியன்று கெஜ்ரிவால் ஆஜரானார். இந்த  வழக்கில் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், ஞாயிறன்று  மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மீண்டும் அனுப்பியுள்  ளது. 9-ஆவது முறையாக அனுப்பப்பட்ட இந்த சம்மனில் வரும் மார்ச் 21க்குள் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி விளக்கம்  அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

மேலும் ஒரு வழக்கு:  புதிய சம்மன்

தில்லி நீர் வாரிய பண மோசடி வழக்கு  தொடர்பாக தில்லி முதல்வர் கெஜ்ரிவா லுக்கு மேலும் ஒரு புதிய சம்மன் அனுப்  பப்பட்டுள்ளது. இந்த சம்மன் தொடர்பாக  கெஜ்ரிவால் அடுத்த வாரம் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை தெரி வித்துள்ளதாக தில்லி அமைச்சர் அதீஷி  தகவல் தெரிவித்துள்ளார்.

விஜயவாடாசொந்த கட்சிக்கே தேர்தல் பத்திரம் மூலம் ரூ.40 கோடி கொடுத்த பாஜக எம்பி
 

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பியாக இருக்கும் பாஜகவின் சி.எம்.ரமேஷ் என்பவருக்கு சொந்தமாக ரித்விக் ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமி டெட் என்ற கட்டுமான நிறுவனம் உள்ளது.  தற்போது வெளியாகியுள்ள தேர்தல் பத்திர நன்கொடை பட்டியலில் பாஜக எம்பி ரமேஷின் ரித்விக் நிறுவனம் ரூ.40 கோடி கொடுத்து,  ரூ.1,098 கோடிக்கு சன்னி நீர்மின் திட்டத்தை பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. முக்கியமாக திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நேரத்தில், தேர்தல் பத்திரங்களை  வாங்கி நன்கொடை அளித்துள்ளார். இந்த  நன்கொடையில் சி.எம்.ரமேஷ் தனது சொந்த கட்சியான பாஜகவிற்கு 90% அள வில் அளித்துள்ளதாவும் தகவல் வெளி யாகியுள்ளது.