india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாட்டின் முக்கிய சுற்றுலா மையமான கோவாவுக்கு, வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. 2014இல் 60 லட்சமாக இருந்த எண்ணிக்கை, 2023இல் 15 லட்சமாக சரிந்துள்ளது. தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்டநாடுகளின் கடற்கரை நகரங்கள் மேம்பட்ட உள்கட்டமைப்பை கொண்டிருப்பதால் வெளிநாட்டவர்களின் சுற்றுலா தேர்வு கோவாவில் இருந்து மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கானாவில் அமலாக்கத்துறை உரிய அனுமதி பெறாமல் அரசு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இது தொ டர்பான வழக்கை விசாரித்த தெலுங்கானா உயர்நீதி மன்றம் அமலாக்கத்துறை பதிவு செய்த சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்து உத்தர விட்டது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து அரசு ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத்துறை முன் அனுமதி பெறவேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும் என்றும், வெள்ள காலங்களில் நீரை மொத்தமாக திறந்து விடக்கூடாது என்றும், அதிக மழை பெய்தால் வரும் வெள்ள நீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதனையடுத்து காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.