india

img

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் வழக்கு

புதுதில்லி, மார்ச் 14 - இந்திய தேர்தல் ஆணையத்தில் 2 புதிய தேர்தல் ஆணையர்களை, ஒன்றிய பாஜக அரசு அவசர அவசர மாக தேர்வு செய்துள்ளது. 

இதில், இந்திய தேர்தல் ஆணை யத்தின் புதிய தேர்தல் ஆணையர் களாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 2 பேரின் பெயர்களும் குடி யரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு வியாழனன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  குடியர சுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும், புதிய தேர்தல் ஆணையர்களின் நிய மனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட உள்ளன.

கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ்வர் குமார் ஒன்றிய அரசின் கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்தவர். பஞ்சாப் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சுக்பீர் சிங் சந்து,  உத்தரகண்ட் மாநில தலைமைச் செய லாளராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

ஆணையர்கள் தேர்வில் வெளிப்படை இல்லை
இதனிடையே, புதிய தேர்தல்  ஆணையர்கள் தேர்வு வெளிப்படை யாக நடைபெறவில்லை என்று மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார். 

தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் பிரதமர் தலைமை யிலான உயர் அதிகாரக் குழுவில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இடம்பெற்றி ருந்த நிலையில், ‘தேர்வுக்குப் பட்டிய லிடப்பட்ட பெயர்கள் தனக்கு முன் கூட்டியே கிடைக்கப்பெறவில்லை’ என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

212 பேரில் 6 பேரை மட்டும் தேர்வு செய்தது எப்படி?
புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்குப் பின், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, “தேர்வுக்கு 10 நிமிடங்களுக்கு முன்புதான் 6 பேர்  அடங்கிய பட்டியலை என்னிடம் கொடுத் தார்கள். முதலில், 212 பேர் கொண்ட பட்டியல் சட்டத்துறை அமைச்சர் தலைமையிலான விசாரணைக் குழு முன்பு இருந்தது. அதிலிருந்து, எந்த அளவுகோலின் அடிப்படையில் முன் னாள் ஐ.ஏ.எஸ் உத்பால் குமார் சிங், பிரதீப் குமார் திரிபாதி, ஞானேஷ் குமார், இந்தேவர் பாண்டே, சுக்பீர் சிங் சந்து மற்றும் சுதிர் குமார் கங்காதர் ரஹாதே ஆகிய 6 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர்? என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “தேர்வுக்குழுவில் முன்பு இருந்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தற்போது இல்லை என்பதால், தங்களுக்கு சாதகமானவர்களை தேர்தல் ஆணையர்களாக நியமித்துக் கொள்வதற்கு ஏற்ப அரசு சட்டம் இயற்றி உள்ளது. எனவே, அதன் அதி கார வரம்பு குறித்து நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால், தேர்வு செய்வதற்கான நடைமுறை சரியானது அல்ல” என்றும் குறிப்பிட்டார்.

அவசர அவசரமாக  நடந்த தேர்வுக் கூட்டம்
தேர்தல் ஆணையர் நியமனத் திற்கு தடைவிதிக்கக் கோரி, உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 15) விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நரேந்திர மோடி அரசானது, அவசர அவசரமாக தேர்தல் ஆணையர்களை நியமித்துள்ளது. வியாழக்கிழமை மாலை 6 மணிக்குத்தான் கூட்டம் நடை பெறுவதாக இருந்த நிலையில், அதை யும் முன்கூட்டியே மாற்றி பிற்பகல் 12 மணிக்கே கூட்டத்தை நடத்தி, புதிய தேர்தல் ஆணையர்களை நியமித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையமானது, ஒரு தலைமை ஆணையர் மற்றும் 2  தேர்தல் ஆணையர்கள் என 3 பேர் களைக் கொண்டதாகும். தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் இருக்கும் நிலையில், ஏனைய 2 தேர்தல் ஆணையர்களான- அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 14 அன்று ஓய்வு பெற்றதாலும், அருண் கோயல் மார்ச் 9 அன்று திடீரென தனது பதவியை ராஜி னாமா செய்து விட்டதாலும், 2 தேர்தல் ஆணையர் பதவிகளும் காலியாகின. அந்த இடங்களுக்கே தற்போது ஞானேஷ் குமாரும், சுக்பீர் சிங் சந்துவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.