india

img

பன்முகத்தன்மையை சீர்குலைத்து விடும்!

“மோடி தலைமையில் பாஜக தனிப் பெரும்பான்மை யுடன் இரண்டாவது முறையாக ஆட்சி யில் அமர்ந்ததும், காஷ் மீர் சிறப்பு உரிமைப் பறிப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மோசடியான தீர்ப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரி மைத் திருத்தச் சட் டம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவை சட்டப் பூர்வமாகவே இந்து ராஷ்டிரமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடு பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் குடி பெயர்ந்து வாழ்ந்துவரும் முஸ்லிம்களை மட்டும் மிகவும் வெளிப்படையாகவே தனி மைப்படுத்தி, ஒதுக்குகிறது.

2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத் தப்பட்ட இந்த மசோதா மக்களவையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறி யது. மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்களின் ஆதரவுடன் இந்த மசோதா  நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின்  ஒப்புதலுக்குப் பிறகு சட்டமானது.

நாடு முழுவதும் எழுந்த தீவிரப்  போராட்டம் காரணமாக, குடியுரிமை  திருத்தச் சட்டத்தை செயல்படுத்துவதை  ஒத்திவைத்த பாஜக அரசு மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளிவருகிற சூழலில்  இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது கடும் கண்ட னத்துக்குரியது.

அரசியல் அமைப்பு சட்டத்திற்கு  எதிராகவும், நாட்டின் பன்முகத்தன்மை யை சீர்குலைக்கும் வகையிலும் கடந்த  10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பிற்  போக்கு இந்துத்துவ பாசிச பாஜக அரசை  ஆட்சிப் பீடத்திலிருந்து அகற்றுவது ஒன்றே ஜனநாயக சக்திகளின் இன்றிய மையாத கடமையாகும்”

வைகோ, பொதுச்செயலாளர், 
மறுமலர்ச்சி திமுக