india

img

பீகாரில் விழுந்த விண்கல்லை அருங்காட்சியகத்தில் வைக்கும்படி நிதிஷ் குமார் உத்தரவு

பீகார் வயல்வெளியில் விழுந்த 13 கிலோ எடை கொண்ட விண்கல்லை அருங்காட்சியகத்தில் வைக்கும்படி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் உள்ள மதுபாணி மாவட்டத்தில் காந்தப் பண்புகளைக் கொண்ட 13 கிலோ எடை கொண்ட விண்கல் ஒன்று வயல்வெளிப் பகுதியில் விழுந்துள்ளது. உரத்த சத்தத்துடன் படுவேகமாக வந்து விழுந்து, பூமிக்குள் புதைந்த அந்த விண்கல்லை அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகள் பார்த்தவுடன், அரசு அதிகாரிகளுக்கு  தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து பீகார் அரசு தரப்பில் கூறுகையில், ‘விண்கல் விழுந்த இடத்தில் நிலத்தில் 5 அடி ஆழத்தில் பள்ளம் வெட்டினர். காந்தப் பண்புகள் கொண்ட 13 கிலோ கிராம் கொண்ட இந்த விண்கல்லை தோண்டி எடுத்தனர். 

இந்த விண்கல் முதலில் மாவட்ட கருவூலத்தில் வைக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பாட்னாவில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு அந்த விண்கல் கொண்டு செல்லப்பட்டது. 

அரசின் விதிப்படி, கொண்டுவரப்பட்ட விண்கல்லை பீகார் அருங்காட்சியகத்தில் வைக்கும்படி நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். விரைவில், விண்கல் நிபுணர்களின் ஆய்வுக்காகவும், அதன் உண்மை  தன்மையைக் கண்டறியவும் தலைநகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அறிவியல் மையத்திற்கு விண்கல் மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

;