india

img

மும்பை கல்லூரியின் ஹிஜாப் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை யில் உள்ள என்.ஜி.ஆச்சார்யா கல்லூரி நிர்வாகம் ஆடை மற்றும் தேர்வு அறை கட்டுப்பாடு என்ற பெயரில், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா அணிந்து தேர்வெழுத தடை விதித்தது. கல்லூரி நிர்வா கத்தின் இந்த உத்தரவு அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது என்றும், யுஜிசியின் விதிமுறைக்கு முர ணானது எனக் கூறி என்.ஜி.ஆச்சார்யா கல்லூரியின் நடவடிக்கையை எதிர்த்து 9 முஸ்லிம் மாணவிகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.]

கடந்த ஜூன் 26 அன்று இந்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதி மன்றம்,”மாணவ - மாணவிகள் மத்தி யில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மத ஆடைகளுக்கு கல்லூரி தடை விதித்துள்ளது. மாணவிகளின் அடிப் படை உரிமையை பறிப்பதாக இதைக் கருத முடியாது” என சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்றம் குட்டு

இந்நிலையில், மும்பை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாணவி கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தனர். இந்த மேல்முறை யீட்டு மனு வெள்ளியன்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்கு பின் உச்சநீதிமன்ற நீதிபதிகள், “இஸ்லாமியப் பெண்கள் என்ன உடை அணிந்து வரவேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். அந்த சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும். இஸ்லாமியப் பெண்களை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது எனச் சொல்வது போல், மற்ற பெண்களை பொட்டு வைக்கக் கூடாது, திலகம் வைக்கக் கூடாது என்று உங்களால் சொல்ல முடியுமா? அவற்றை உங்களால் தடை செய்ய முடியுமா? பெயரிலேயே மதத்தை கண்டுபிடித்துவிடலாமே? அப்படியா னால் அதற்கு மாற்றாக எண்களை வைத்து அழைப்பீர்களா?. மத பேத மின்றி அனைத்து மாணவர்களும் இணைந்து பயில வழிவகை செய்ய வேண்டும்.எனினும் உடலை முழுமையாக மறைக்கும் வகையிலான பர்தா போன்ற ஆடைகளை மாணவி கள் அணிந்துவர விதிக்கப்பட்ட தடை தொடரும்” என உத்தரவிட்டனர். 

தடை ரத்து செய்யப்படவில்லை

ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் சுற்றறிக்கைக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதாவது கல்லூரி நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை இடைக் காலமாக நிறுத்திவைத்து உச்சநீதி மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். உடலை முழுமையாக மறைக்கும் வகையிலான பர்தா போன்ற ஆடை களை அணிய கல்லூரி நிர்வாகம் விதித்த தடை தொடரும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்து, வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.