அரசின் முடிவுகளை விமர்சிக்கும் உரிமை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உண்டு; விமர்சனங்களை குற்றமாக கருதினால், ஜனநாயகம் அழிந்துவிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதற்கு எதிராக வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் “Black Day for Jammu & Kashmir” என பதிவிட்ட பேராசிரியருக்கு எதிராக மும்பை போலீசார் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தனர். பேராசிரியர் மீது தொடரப்பட்ட வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்ததால், அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய அரசின் முடிவுகளை விமர்சிக்கும் உரிமை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உண்டு; விமர்சனங்களை குற்றமாக கருதினால், ஜனநாயகம் அழிந்துவிடும் என தெரிவித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.