india

img

3 நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு!

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் சதீஷ் சந்திரா சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மஷி, சந்தீப் மேத்தா ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
கடந்த நவம்பர் 6-ஆம் தேதி தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற கொலிஜியம், தில்லி, ராஜஸ்தான் மற்றும் கவுகாத்தி உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளான சதீஷ் சந்திரா சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மஷி மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப் பரிந்துரைத்தது. இதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில், இன்று மாலை 3 நீதிபதிகளும் பதவியேற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.