india

img

மோடியின் நண்பர் ராம்தேவிற்கு உச்சநீதிமன்றம் மீண்டும் குட்டு

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்ப ரும், போலிச் சாமியாருமான பாபா  ராம்தேவ் 2006இல் பதஞ்சலி என்ற நிறு வனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் மோடி பிரதமர் ஆன பின்பு பன்னாட்டு கார்ப்ப ரேட் நிறுவனத்திற்கு ஈடாக பிரம்மாண்ட தொழிற்சாலையை கட்டிய நிலையில், தனது வணிகத்தை மேம்படுத்த அலோபதி (ஆங்கில மருத்துவம்) மருத்துவம் மற்றும் கொரோனா தடுப்பூசி தொடர்பான சர்ச்சைக்குரிய விளம்பரங்களை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், கடந்த ஏப்ரல் 2 அன்று ராம்தேவ், ஆச்சார்யா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் நேரில்  ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். 

“நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு தற்போது  மன்னிப்பு கேட்பதை எப்படி ஏற்க முடியும்? மன்னிப்பு என்கிற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்து விட்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்” என உச்சநீதிமன்றம் மன்னிப்பை நிராகரித்த நிலை யில், புதனன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அலோ பதி மருத்துவம் குறித்து போலி விளம்பரம் வெளியிட்டது தொடர்பாக  நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி மீண்டும் பிரமாண பத்திரம் தாக்கல்  செய்தார் ராம்தேவ். ஆனால் இந்த நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க  மீண்டும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. “மன்னிப்பு கேட்கும்  போது மிக அலட்சியமாக நடந்து கொள்கிறீர்கள்; அதே அலட்சி யத்தை நாங்கள் ஏன் உங்களுக்கு காட்டக்கூடாது?, பதஞ்சலி நிறு வனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரி களுக்கு எதிராக நாங்கள் ஏன் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது?, அலட்சியமான உங்கள் மன்னிப்பை நாங்கள் நம்ப வில்லை” என பதஞ்சலியின் இரண்டாவது மன்னிப்பு பிரமாணப் பத்தி ரத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.