புதுதில்லி, பிப். 13 - தில்லியை நோக்கி அணிவகுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் மாநிலத்தின் விவசாயிகள் மீதும் கர்நாடகாவிலிருந்து சென்ற விவசாயிகள் மீதும் ஒன்றிய பாஜக அரசு ஏவியுள்ள அடக்குமுறைக்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் முன்னணி) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாய விளைபொருள் களுக்கு உற்பத்திச் செலவுடன் கூடுத லாக 50 சதவீதம் விலை வைத்து குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ண யம் செய்ய வேண்டும் என்பது உள்ளி ட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட மாபெரும் விவசாயிகள் சங்கங்களின் தலைமையில், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிர தேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களின் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமைப்புகள் இணைந்து ஐக்கிய விவ சாயிகள் முன்னணியை உருவாக்கின. இந்த மாபெரும் கூட்டமைப்பு, மோடி அரசின் விவசாய விரோதக் கொள்கை களை எதிர்த்து வரலாறு காணாத எழு ச்சியை நடத்தியது. இந்த எழுச்சியின் முன்பு மோடி அரசு பணிந்தது.
எனினும் ஒப்புக் கொண்ட கோரிக் கைகளை நிறைவேற்ற மோடி அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில் விவ சாய விரோத - தொழிலாளர் விரோத மோடி அரசை வீழ்த்துவோம் என முழக்கமிட்டு, எதிர்வரும் பிப்ரவரி 16 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்ன ணியும் அனைத்து மத்திய தொழிற்சங் கங்களும் இணைந்து கிராமப்புற வேலைநிறுத்தம் மற்றும் தில்லி முற்றுகை உள்ளிட்ட போராட்டங் களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், ஐக்கிய விவசாயி கள் முன்னணியில் இருந்து ஒரு தரப்பு பிரிந்து சென்று, “ஐக்கிய விவசாயிகள் முன்னணி (அரசியல் சார்பற்றது)” என்று பெயரிட்டுக் கொண்டது. இதில் பஞ்சாப்பைச் சேர்ந்த சில விவசாயி கள் அமைப்புகளே உள்ளன. இந்த அமைப்பின் சார்பில் பிப்ரவரி 13 அன்று தில்லி முற்றுகை அறிவிக்கப்பட்டு, ஏராளமான விவசாயிகள் தில்லியை நோக்கி கடந்த இரண்டு நாட்களாக அணிவகுத்தனர்.
இந்த விவசாயிகள் மீது மோடி அரசு கடும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. தில்லிக்குள் நுழைய விடாமல் சாலைகளில் தடுப்பு மட்டு மின்றி, ஆணிகளை அடிப்பது, சாலை களையே பெயர்ப்பது உள்ளிட்ட தனது வழக்கமான அராஜகத்தை அரங்கேற்றி யுள்ளது. இதையும் மீறி விவசாயிகள் தில்லிக்குள் நுழைய முற்பட்ட போது, பஞ்சாப் - ஹரியானா எல்லையிலும், கர்நாடகாவிலிருந்து சென்ற விவசாயி களை தடுப்பதற்காக போபாலிலும் விவசாயிகள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. டிரோன் மூலமாக விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி போர்க்களமாக மாற்றி யுள்ளது.
இப்போராட்டத்தை நடத்தியது விலகிச் சென்ற அமைப்பு என்ற போதி லும், அடக்குமுறைக்கு உள்ளாவது விவசாயிகள் என்ற முறையில், மோடி அரசின் தாக்குதலுக்கு ஐக்கிய விவ சாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) கடும் கண்டனம் தெரி வித்துள்ளது.
விவசாயிகள் மீதான தாக்கு தலுக்கு நீதி கோரியும், ஏற்கெனவே வலி யுறுத்தப்பட்டு வரும் கோரிக்கை களை உடனடியாக நிறைவேற்ற வலி யுறுத்தியும் பிப்ரவரி 16 அன்று நாடு முழுவதும் ஏற்கெனவே திட்டமிடப் பட்டுள்ள கிராமப்புற வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தை வலு வாக நடத்துமாறும்; பிப்ரவரி 16 அன்று தில்லியை முற்றுகையிட வேறுபாடு களை மறந்து அனைத்து விவசாயிகள் அமைப்புகளும் ஓரணியில் திரள முன்வருமாறும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மத்திய செயற்குழு அழைப்பு விடுத்துள்ளது.