ஹரியானா மாநிலத்தில் வர விருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் ஆளும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியான துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தீவிரம டைந்த நிலையில், திங்களன்று இரவு பாஜக அரசிற்கு அளித்து வந்த ஆத ரவை ஜேஜேபி கட்சி வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து ஜேஜேபி கட்சி யின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதனால் ஹரியானா பாஜக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்ட நிலை யில், செவ்வாயன்று காலை ஹரி யானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது அமைச்சரவையுடன் ராஜினாமா செய்து, ஆளுநரிடம் ராஜி னாமா கடிதத்தைவழங்கினார். அதன் பிறகு குருக்ஷேத்ரா தொகுதி எம்.பி. யான நயாப்சிங் சைனி சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப் பட்டார். இந்நிலையில், செவ்வா யன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் நயாப் சிங் சைனி ஹரியானாவின் புதிய முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
இதையடுத்து, ஹரியானா புதிய முதல்வர் நயாப் சிங் சைனி புத னன்று அம்மாநில சட்டமன்றத்தில் தனது அரசு மீதான நம்பிக்கை தீர்மா னத்தை கொண்டு வந்தார். இதில் அர சுக்கு ஆதரவாக ஹரியானா லோகித் கட்சி மற்றும் 6 சுயேச்சை எம்எல்ஏக் கள் மற்றும் ஜேஜேபி கட்சியின் 5 எம்எல்ஏக்கள் என 54 உறுப்பி னர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதை யடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் நயாப் சிங் சைனி அரசு வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
ஜேஜேபியை உடைத்த பாஜக
கடந்த 2019இல்நடைபெற்ற ஹரி யானா சட்டமன்ற தேர்தலில் மொத்த முள்ள 90 இடங்களில் பாஜக 41 இடங்க ளிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும், ஜேஜேபி 10 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம் மற்றும் ஹரி யானா லோஹித் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், 41 இடங்களில் வென்ற பாஜக, ஜேஜேபி கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவு தாலாவுக்கு பாஜக துணை முதல்வர் பதவி வழங்கியது.
நெருக்கடி காலகட்டங்களில் ஆட்சிக்கு ஆதரவாக ஜேஜேபி கட்சி கடந்த நான்கரை ஆண்டுகளாக பக்க பலமாக இருந்தது. ஆனால் மக்க ளவை தேர்தலில் கூடுதல் சீட் கேட்ட தற்காக ஜேஜேபி கட்சியை கூட்டணி யில் இருந்து துரத்தியது மட்டுமல்லா மல், அந்த கட்சியின் 5 எம்எல்ஏக் களை கடத்தி தங்கள் பக்கம் வளைத் தது மட்டுமல்லாமல் ஜேஜேபி கட்சி யில் உள்ள சில முக்கிய தலைவர் களை தங்கள் பக்கம் இழுத்து அக் கட்சியை இரண்டாக உடைத்துள்ளது பாஜக.