india

img

மணல் ஓவியப் போட்டிக்கான இத்தாலியின் உயரிய விருது பெற்ற இந்தியர்

இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச மணல் ஓவியப் போட்டியில் மகாத்மா காந்தியின் சிற்பத்தை உருவாக்கிய இந்திய கலைஞர் சுதர்சன் பட்நாயக் விருதை வென்றார்.

இத்தாலி நாட்டின் லெஸ்ஸி நகரில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்பப் போட்டியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் பங்கேற்றார். 8 நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் ரஷியக் கலைஞர் பவேல் மினில்கோவ் என்பவருடன் இணைந்து 8 அடி உயரத்தில் மகாத்மா காந்தி சிலையை மணலில் உருவாக்கி பார்வையாளர்களையும், நடுவர்களையும் கவர்ந்தார். இந்த சிலைக்காக இத்தாலி நாட்டின் ‘தங்க மணக்கலை’ விருதுக்கு சுதர்சன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்டார். ரோம் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.
 

;