சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல், நீட் உள்ளிட்ட நுழை வுத்தேர்வுகளுக்குத் தயாராவதற்காகப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக 23 பள்ளி களுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான தபஸ் ராய் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக திங்களன்று அறி வித்தார். மேலும் கட்சியின் அனைத்து பதவிகளி லும் இருந்து விலகுவதாகவும் அவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழி பட தடையற்ற அனுமதி கோரிய மனுவை 8 வாரத்தில் விரைந்து முடிக்க கீழமை நீதிமன்றத் திற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் உள்ள கடாபா அரசு கல்லூரியில் பயிலும் 3 மாணவி கள் மீது, மாணவர் ஒருவர் அமிலம் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமி லம் வீச்சு சம்பவத்தில் படுகாயம் அடைந்த அலினா, அர்ச்சனா, அமிர்தா ஆகிய 3 மாணவிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரபல ஆன்லைன் சேவை நிறுவனமான பிளிப் கார்ட் நிறுவனம் கூகுள் பே, போன் பே உள் ளிட்டவற்றுக்குப் போட்டியாக யுபிஐ சேவையை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. “பிளிப்கார்ட் பே” எனப்படும் இந்த பிரத்யேக யுபிஐ சேவை, தனது 50 கோடி ஆன்லைன் வாடிக்கை யாளர்களுக்கு பேருதவியாக இருக்கும் என பிளிப்கார்ட் கணிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
பாஜக ஆளும் அசாம் மாநிலத்தின் காம் ரூப் மாவட்டத்தில் ரூ.1 கோடிக்கும் அதிக மான மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநில கட்சியான இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) கட்சியின் தலைவராக இருக்கும் நபேசிங் ரதி (66) கடந்த பிப்ரவரி 25 அன்று ஜஜ்ஜார் மாவட்டத்தில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். முன்னாள் பாஜக எம்எல்ஏ நரேஷ் கவுசிக் கூலிப்படையை வைத்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக தகவல் வெளியான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 2 பேர் கோவாவில் கைது செய்யப் பட்டுள்ளனர்.
ரஞ்சிக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் தமிழ் நாடு அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் இன் னிங்ஸ் தோல்வியை சந்தித்த நிலையில், மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பெங்களூரு
ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு
என்ஐஏ தீவிர விசாரணை
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்பீல்டு பகுதியில் உள் ளது ராமேஸ்வரம் கபே உண வகம். பெங்களூரு நகரில் மிகவும் பிரபல மான இந்த உணவகத்தில் கடந்த மார்ச் 1 அன்று மதிய நேரத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில் உணவக பணியாளர்கள் 2 பேர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்த நிலை யில், இதுகுறித்து ஒயிட் பீல்ட் சரக போலீ சார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய் துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்பு டைய இளைஞர் நடந்து செல்லும் சிசி டிவி வீடியோவை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந் நிலையில், இளைஞரை பிடிக்க ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் கர் நாடக போலீசார் தீவிர தேடுதல் வேட்டை யில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் கபே உணவக குண்டுவெடிப்பு வழக்கை கர் நாடக அரசு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு தற்போது என்ஐஏக்கு மாற்றப் பட்டுள்ளது. தற்போது ராமேஸ்வரம் கபே மற்றும் ஒயிட்பீல்டு பகுதி என்ஐஏ கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.