நாடு முழுவதும் பயிற்சி மையங்க ளுக்கு (கோச்சிங் சென்டர்கள்) புதிய வழிகாட்டுதல்களை ஒன் றிய அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பயிற்சி மையங்கள் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை பயிற்சியில் சேர்க்கக் கூடாது. பட்டப் படிப்பை விட குறைவான தகுதி களைக் கொண்ட ஆசிரியர்களை ஈடு படுத்த கூடாது. பயிற்சியின் தரம், வழங்கப்படும் வசதிகள் அல்லது பயிற்சி மையம் அல்லது அங்கு பயின்ற மாணவர்களால் பெறப்பட்ட முடிவுகள் குறித்து, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரங்களை வெளியிட கூடாது. மேலும் பயிற்சி மையங்கள் இடைநிலைப் பள்ளித் தேர்வை முடித்த பின்னரே மாண வர்களை சேர்க்க வேண்டும். தவறான வாக்குறுதிகள் வழங்குவது, தரவரிசை அல்லது நல்ல மதிப்பெண்களுக்கு உத்தரவாதம் அளிப்பது போன்றவற்றை செய்யக் கூடாது” என பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் வழிகாட்டு நெறிமுறைகள் எப்பொழுது நடைமுறைக்கு வரும் என ஒன்றிய கல்வித் துறை அமைச்சகம் வெளிப்படை யாக எதுவும் கூறவில்லை.