india

img

ஐக்கிய ஜனதாதளம் “இந்தியா” கூட்டணியில்தான் நீடிக்கிறது

கார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா  தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் தலை மையிலான “மகாகத் பந்தன் கூட்டணி” ஆட்சி நடைபெற்று வருகிறது. வர விருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த 28 கட்சிகள் ஒன்றி ணைந்துள்ள “இந்தியா” கூட்டணி யிலும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கிறது.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்  கீடு மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலை வர் லாலுவின் மகளான ரோகினி டுவிட் குறித்த விவகாரம் தொடர்பாக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்க உள்ளதாக வெள்ளியன்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியானது.  

இதனை பாஜக மற்றும் ஊடகங்கள் பெரிதாக்கிய நிலையில், “இந்தியா” கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறவில்லை என அக்கட்சி யின்  மாநிலத் தலைவரான உமேஷ் சிங்  குஷ்வாஹா அதிகாரப்பூர்வமாக கூறி யுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறு கையில்,” ஐக்கிய ஜனதாதளம் “இந் தியா” அணியுடன்தான் உள்ளது. ஆனால் கூட்டணி குறித்து காங்கிரஸ் சுயபரிசோதனை செய்ய வேண்டும். முக்கியமாக பீகாரில் ஆளும் “மகாகத் பந்தனில்” எல்லாம் நன்றாகவே இருக்கி றது. ஊடகங்கள் ஏதோ ஒரு நிகழ்ச்சி நிர லால் இயக்கப்படுகின்றன. நான் 2  நாட்களாக முதல்வரைச் சந்தித்தேன்.  இது வழக்கமான வதந்தி மட்டுமே. வதந்திகளையும் நாங்கள் நிராகரிக்கி றோம்” எனக் கூறினார்.  ஆனால் ஐக்கிய ஜனதாதள தலை வர் நிதிஷ் குமார் சனியன்று மாலை 6 மணி வரை கூட்டணி தொடர்பாக  எந்த வித அதிகாரப்பூர்வ முடிவை அறி விக்கவில்லை.

ஆட்சியை கவிழ்க்க விரும்பவில்லை: ஆர்ஜேடி
“இந்தியா” மற்றும் “மகாகத் பந் தன்” கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா  தளம் கட்சி வெளியேறுவதாக வெளி யான தகவலை அடுத்து சனியன்று ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி (ஆர்ஜேடி)  எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் முடிவு எடுக்க எம்எல்ஏக் கள் அதிகாரம் அளித் துள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது. கூட்டம் நிறைவு பெற்ற பிறகு ஆர்ஜேடி மூத்த தலைவர்  மனோஜ் ஜா கூறுகையில், “பீகார் மக்க ளுக்காக வேலைவாய்ப்பும், இடஒதுக்  கீடு அளித்துள்ள நாங்கள் ஏன் அரசை  கவிழ்க்க வேண்டும். பீகார் “மகாகத் பந்  தன்” கூட்டணி அரசை கவிழ்க்க ஒரு போதும் முயற்சிக்க மாட்டோம்” என அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய ஜனதாதளம்  நிதிஷின் கட்டுப்பாட்டில் இல்லை
ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில்,”நிதிஷ் குமார் எங்கள் மரியாதைக்குரியவர். ஆனால் ஐக்கிய ஜனதாதள கட்சி தற்போது நிதிஷ் கட்டுப்பாட்டில் இல்லை. சில  விஷயங்கள் நிதிஷ்குமாருக்கு தெரியா மலேயே அரங்கேறுகின்றன” என அவர் கூறினார்.

நிதிஷ் போன் எடுக்கவில்லை: காங்கிரஸ்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,”பீகார் அரசியல் நிலவரம் தொடர்பாக காங்கி ரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே,  நிதிஷ்குமாருடன் பேச முயன்றார். ஆனால் அவர் பிஸியாகவே இருந்தார். ஒருமுறை மட்டுமல்ல, பலமுறை பேச  முயன்றார். ஆனால் பேச முடிய வில்லை” என அவர் கூறினார்.