india

img

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது

பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, மக்களவை சபாநா யகர் பதவி, ஒன்றிய அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் என்ற நம்பிக்கை யில் மோடி மூன்றாவது முறையாக பிரத மர் இருக்கையில் அமர ஆதரவு அளித்தது ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியு).

பிரதமர் பதவிக்கான இருக்கையில் அமரும் வரை ஜேடியு தலைவரும், பீகார்  முன்னாள் முதல்வருமான நிதிஷ் குமாரை தனது அருகில் அமர வைத்து ஷூட்டிங் நடத்தினார் மோடி. ஆனால் பிரதமர் ஆக பொறுப்பேற்றதும் மோடி நிதிஷ் குமாரை புறந்தள்ள ஆரம்பித்தார். ஜேடியு  முன்வைத்த 2 கோரிக்கையான மக்க ளவை சபாநாயகர்,  ஒன்றிய அமைச்சர வையில் கூடுதல் அதிகாரம் உள்ளிட்டவை களை மோடி அரசு தர மறுத்தது. இதனால் ஜேடியு கட்சி கடும் அதிருப்தியில் உள்ள தாக தகவல் வெளியாகியது. பீகார் மாநி லத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என ஞாயிறன்று நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் ஜேடியு கோரிக்கை விடுத்தது. அனைத்து கட்சிக் கூட்டத்தி லேயே ஒன்றிய அமைச்சர்கள் ஜேடியு-வின் கோரிக்கையை அலட்சியம் செய்த தாக தகவல் வெளியாகியது. 

இந்நிலையில், திங்களன்று நாடாளு மன்ற மக்களவையில் ஜேடியு எம்.பி. ராம்பிரித் மண்டல் பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி எழுத்துப்பூர்வ மாக கேள்வி எழுப்பினார். இதற்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளிக்கையில்,”பீகார் மாநி லத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசிடம் இல்லை. பீகார் மாநிலமானது சிறப்பு அந்தஸ்து பெறக் கூடிய வரையறைகளில் இடம் பெறவில்லை” எனக் கூறினார். 

மோடி அரசின் இந்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்போவதாகவும் ஜேடியு தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.