புதுதில்லி,மார்ச் 22- நாடாளுமன்ற மக்களைவையில் ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியதாவது: ‘‘பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டத்தை அரசாங்கம் இயற்றியுள்ளது. அதன்படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை பணியமர்த்தும் பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனங்கள், பாலியல் துன்புறுத்தல் புகார்களைப் பெற குழுவை அமைக்க வேண்டும்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.