நாட்டில் தற்பொழுது பின் பனிக்காலம் இன்னும் நிறை வடையாத சூழலில் தென் மாநி லங்களில் முன்கூட்டியே கோடைகாலம் துவங்கியுள்ளது.
இதனால் தெலுங்கானாவில் கொளுத் தும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து அம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தெலுங்கானா பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 15 முதல் ஏப்ரல் 23 வரை அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும். அதன் படி காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் இயங் கும். இந்த உத்தரவு அரசு பள்ளிக ளுக்கு மட்டுமின்றி தனியார் பள்ளிக ளுக்கு பொருந்தும்.எனினும் பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்க ளுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் முழுநேர மாக கண்டிப்பாக தொடரும்” என கூறப் பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் தற்போது 35 டிகிரி செல்ஸியஸ் அளவில் வெயில் கொளுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.