india

ப.சிதம்பரம் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

புதுதில்லி,அக்.4- ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு  வழக்கில் கடந்த  ஆகஸ்டு 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரம், நீதிமன்ற காவலில் தில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   இந்த வழக்கில் தில்லி உயர்நீதி மன்றம் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்தும், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரியும் ப.சிதம்பரம் உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு  மீது வெள்ளியன்று விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம், மனு மீதான விசாரணை யை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.  அக்டோபர்   14 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

;