india

img

சமஸ்கிருதம் தேசிய மொழியாக இருக்க வேண்டுமாம் - நடிகை கங்கனா ரணாவத்

சமஸ்கிருதம் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
சமஸ்கிருதம் தேவ பாஷை என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் சாமனிய மக்கள் பேசுவதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் தற்போது மிகச் சிறிய எண்ணிக்கையிலான மக்களே அந்த மொழியை பேசும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் ஒன்றிய மோடி அரசு சமஸ்கிருதம் இந்தியை மக்களிடம் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் நிலையில் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் சமஸ்கிருதத்தை வளர்க்க பெரும் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. 2017 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரை சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.643.84 கோடி. அதேநேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடிசா மொழிகள் அனைத்திற்கும் சேர்த்து ஒதுக்கப்பட்ட தொகையோ ரூ.29 கோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தநிலையில்தான் பாஜக ஆதரவு நடிகை கங்கனா ரணாவத் சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கங்கனா ரணாவத் நடித்துள்ள தாகட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று  நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய கங்கனா, நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:
"நாட்டின் தேசிய மொழியாக ஹிந்தியை ஏற்க முடியாது எனக் கூறுபவர்கள் அரசியலமைப்பை மறுக்கிறார்கள் என்று அர்த்தம். இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்கலாம். தமிழ் மற்றும் ஹிந்தி உள்பட அனைத்து மொழிகளுக்குமே மூத்த மொழி சமஸ்கிருதம்தான். பல்வேறு மொழிகள் மற்றும் கலாசாரங்கள் அடங்கிய பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. தங்களது மொழி மற்றும் கலாசாரம் குறித்து பெருமைகொள்வது அனைவருக்குமான பிறப்புரிமை. நான் பஹாரி என்பதில் பெருமை கொள்கிறேன்" என்றார். 
ஏற்கனவே தேசிய மொழி குறித்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் இடையே ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.