மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மண்டல தலைவராக இருப்பவர் ஷாஜ கான் ஷேக். இவரை ரேஷன் ஊழல் தொடர்பாக கைது செய்ய கடந்த ஜனவரி 5 அன்று அம லாக்கத்துறையினர் வீட்டிற்கு சென்றனர். ஆனால் 1000-க்கும் மேற்பட்ட திரிணாமுல் காங்கி ரஸ் தொண்டர்கள் ஷாஜகானை கைது செய்ய விடாமல், அம லாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அமலாக்கத்துறை யினர் காயமடைந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலை வர் ஷாஜகான் ஷேக் தனது கூட்டாளிகளுடன் சம்பவ இடத் தில் இருந்து தப்பி தலைமறை வானார்.
சந்தேஷ்காளி பாலியல் வக்கிரம்
ஷாஜகான் ஷேக் தலை மறைவான பின்பு வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திற்கு உட்பட்ட சந்தேஷ்காளி கிராம பெண்கள், திரிணாமுல் காங்கி ரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் குண்டர்களுடன் மிரட்டி நிலத்தை பறித்தும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான தோழர் நிராபதா சர்தா தலை மையில் போராட்டம் நடத்தி னர்.
இந்த போராட்டத்தை ஒடுக்க பிப்ரவரி 11 அன்று மம்தா அரசு காவல்துறை மற்றும் திரிணா முல் காங்கிரஸ் குண்டர்கள் மூலம் போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. நில அப கரிப்பு, பாலியல் குற்றவாளி யான ஷாஜகான் ஷேக்கை கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கேட்டு போராட்டத்தை முன்னின்று நடத்திய நிராபதா சர்தார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். தொடர்ந்து போராட் டம் நடத்த முடியாதபடி சந்தேஷ் காளியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஆளும் திரிணா முல் காங்கிரஸ் அரசு. அதன் பிறகு உயர்நீதிமன்ற உத்தர வால் 144 தடை உத்தரவு நீக்கப் பட்டாலும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதி களை சந்தேஷ்காளிக்குள் நுழைய விடாமல் அடுத்தகட்ட அராஜகத்தில் ஈடுபட்டது திரி ணாமுல் காங்கிரஸ் அரசு.
உயர்நீதிமன்றம் குட்டு
சந்தேஷ்காளிக்குள் நுழைய ஆளும் மம்தா அரசு அனுமதி மறுப்பது தொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கி ரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து உயர்நீதிமன்றத் தில் முறையிட்டதால், வழக்கில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளி களை விரைந்து கைது செய்யு மாறு மேற்கு வங்க அரசிற்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டது. இந்நிலையில், ஒன்றிய மோடி அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநர் ஆனந்த் போஸ் 72 மணிநேரத்திற்குள் ஷாஜகான் ஷேக்கை கைது செய்ய வேண்டும் என செவ்வா யன்று கெடு விதித்தார்.
கைது
இதையடுத்து, வியாழ னன்று காலை சந்தேஷ்காளி தீவில் இருந்து 30 கிமீ தொலை வில் உள்ள மினாகானில் மறைந் திருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக் 55 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். கைது செய் யப்பட்ட பின்னர் ஷாஜகான் ஷேக் பாசிர்ஹட் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, ஒருநாள் நீதிமன்ற காவலுக்கு பின்னர் மீண்டும் ஆஜர்படுத்த பாசிர்ஹட் நீதிபதி உத்தரவிட்டார்.