புதுதில்லி, ஜன. 12 - அயோத்தியில் ராமர்கோவில் திறப்பு முறையாக நடைபெற வில்லை; விழாவில், எந்த விதி முறைகளும் பின்பற்றப்படவில்லை; அனைத்தும் அரசியல் கோணத்தி லேயே நடைபெறுகிறது என்று சங்க ராச்சாரியார்கள் உள்ளிட்ட இந்து மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
ஆன்மீகத்தில் அரசியல் புகுவது வேதனையாக உள்ளது என்றும் கூறியிருக்கும் அவர்கள், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கப் போவ தில்லை என்றும் அறிவித்துள்ளனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில்
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ராமர் கோவில் கட்டும் பணிகள் துவங்கின. இதற்கு பிரதமர் மோடிதான் அடிக்கல் நாட்டினார். உலகம் முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு, கட்டுமானப் பணி கள் துவங்கின. இதில், பல்வேறு நிலமோசடி, நிதி மோசடி புகார்களும் எழுந்தன. எனினும், அவை கமுக்கமாக அமுக்கப்பட்டன. கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.
கட்டுமானம் முடிவதற்கு முன்பே திறப்பு விழா
மொத்தம் நான்கு தளங்களைக் கொண்ட ராமர் கோவிலின் கட்டு மானப் பணியில், தற்போது இரண்டு தளங்கள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. எனினும், 2024 தேர்தலில் இந்துமத உணர்வைத் தூண்டி எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று துடிக்கும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள், கோவில் கட்டுமானம் பாதி மட்டுமே முடிந் திருந்தாலும், அதனை தேர்தலுக்கு முன்பாகவே திறப்பது, அதிலும் ஜனவரி 22 அன்று பிரதமர் மோடி கைகளினாலேயே ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வது என்று திட்ட மிட்டு, அதுதொடர்பான அறிவிப்பு களையும் வெளியிட்டுள்ளனர்.
மதத் தலைவர்கள் சங்கராச்சாரிகள் எதிர்ப்பு
ஆனால், இதற்கு இந்து மதத் தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரைகுறையாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை பிர தமர் மோடி திறந்து வைப்பது சாஸ்திரங்களுக்கு எதிரானது; அதி லும் பிரதமர் மோடியே நேரடியாக சிலையை பிரதிஷ்டை செய்வது, அரசியல் லாபத்திற்கானது; இதுஅனைத்தும் தெரிந்தும், விஸ்வ ஹிந்து பரிஷத் கோயில் திறப்பில் தீவிரம் காட்டி வருகிறது என்று தங்களின் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, ராமர் கோவில் கும்பா பிஷேக விழாவில் பங்கேற்க போவ தில்லை என அறிவித்துள்ள பூரி சங்கரா ச்சாரியார் சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி, “கோவிலில் சிலையை தொட்டு பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வார், நான் அங்கு சென்று கை தட்டி கொண்டு இருக்க வேண்டுமா? அயோத்தியில் பிரதமரே அனைத் தையும் செய்துவிட்டால் மதகுருமார்க ளுக்கு செய்வதற்கு மிச்சம் என்ன இருக் கிறது என்பதை மக்கள் யோசிக்க வேண்டும்.
சனாதன தர்மத்தை மதிப்ப தற்கும் மதச்சார்பற்ற தலைவராக பிர தமர் தன்னை சித்தரித்து கொள்ளாமல் இருப்பதற்கும் பாராட்டுகள். ஆனால், மதகுருமார்கள் செய்யும் யோகாவை யும் பிரதிஷ்டை விழா முதற்கொண்டு அனைத்தையும் பிரதமரே செய்து விடுகிறார்” என்று கொந்தளித்துள்ளார்.
அரசியல் தலைவரே மதத்திற்கும் தலைவரானால் நாங்கள் எதற்கு?
உத்தரகண்ட் சங்கராச்சாரியார் சுவாமி அவி முக்தீஸ்வரானந்த் சரஸ் வதியும், “அரசியல் லாபத்திற்காக மட்டுமே அரைகுறையாக கட்டப் பட்டுள்ள ராமர் கோவில் திறக்கப்படு கிறது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பாரம்பரி யத்தை பின்பற்றவில்லை. இந்தி யாவை பொறுத்தவரையில் மன்னர்க ளும் மதகுருமார்களும் வேறு வேறு ஆட்களாகவே இருந்துள்ளனர்.
ஆனால், தற்போது, அரசியல் தலை வர், மதத்தின் தலைவராக ஆக்கப் பட்டுள்ளார். இது பாரம்பரியத்துக்கு எதிரானது. அரசியல் லாபத்திற்காக செய்யப்படுகிறது” என்று கடுமை யாக சாடியுள்ளார். மேலும், “ஜனவரி 22 அன்று அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவில் நான் பங்கேற்கப்போவதில்லை. இந்த நிகழ்வை நடத்துவதற்கான முறை யான விதிமுறைகள் பின்பற்றப்பட வில்லை.
பிரதமர் மோடி கருவறை யில் இருந்து சிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்கிறார். இதில் ஏதோ அரசியல் இருக்கிறது, அதாவது இந்த நிகழ்வுக்கு ஏதோ ஓர் அரசியல் கோணம் கொடுக்கப்படுகிறது. கண் ணியமான முறையில் இந்த நிகழ்வு நடத்தப்பட வேண்டும். நான் அதை எதிர்க்கவும் இல்லை, அதில் கலந்து கொள்ளவும் மாட்டேன். நான் எனது கருத்துகளை முன்வைத்துள்ளேன், அனைத்து நிகழ்வுகளும் சுமூகமாக நடக்க வேண்டும் என விரும்புகி றேன்” என்றார்.
ராமர் கோவில் பற்றிப் பேச சைவர்களுக்கு உரிமையில்லை
இவ்வாறு அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா சாஸ்திர, சம்பிர தாயங்களை மீறி நடப்பது குறித்து, சங்கராச்சாரியார்கள், இந்து மதத் தலைவர்களிடமிருந்து வலுவான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அது பற்றி தங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை; யார் எதிர்த்தாலும் ராமர் கோவில் திறப்பு விழாவை நடத்தியே தீருவோம்; ராமர் சிலையை மோடிதான் பிரதிஷ்டை செய்வார் என்று விஎச்பி மூத்த தலைவரும், ராமர் கோவில் அறக்கட்டளைப் பொதுச்செயலாளருமான சம்பத் ராய் கூறியுள்ளார்.
இன்னும் ஒருபடி மேலே சென்று, “அயோத்தி ராமர் கோவில், ராமானந்த் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கே சொந்தம். சங்கராச்சாரியார்களோ சைவர்களோ சொந்தம் கொண்டாட முடியாது” என்று அதிரடியாக கூறி, இந்து மதத் தலைவர்கள் அனைவரை யும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.
11 நாள் விரதத்தை ஆரம்பித்தார் மோடி
இதனிடையே, “ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு இன்னும் 11 நாள்களே உள்ளன. இந்த மங்களகரமான நிகழ்விற்கு நானும் சாட்சியாக இருப்பது எனது அதிர்ஷ்டம். ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்வின்போது அனைத்து இந்தி யர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கருவியாக என்னைக் கடவுள் தேர்ந்தெடுத் துள்ளார். இதனை மனதில் வைத்து 11 நாட்களுக்கு சிறப்பு பிரார்த்தனை பயிற்சியை (விரதம்) மேற்கொள்ள உள்ளேன். இந்த தருணத்தில் எனது உணர்வு களை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமாக உள்ளது” என்று பிரதமர் மோடி டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் நெக்குருகியுள்ளார்.
ராமரை அரசியல் கருவியாக்கிய பாஜக;
விழாவைப் புறக்கணித்த எதிர்க்கட்சிகள்
ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு வருமாறு அறக்கட்டளை நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்த நிலையில், “இந்திய ஆட்சி அதிகாரத்தின் அடிப்படைக் கொள்கையானது, இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அமைந்துள்ள அரசு, எவ்விதமான மதத்தையும் சார்ந்து இருக்கக் கூடாது என்பதாகும். ஆனால், இது ஆளும் தரப்பினரால் இந்த நிகழ்வில் மீறப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு மதக் கொண்டாட்டத்தை, பிரதமர், உத்தரப்பிரதேச முதலமைச்சர் மற்றும் இதர அரசு அதிகாரிகள் நேரடியாகவே சம்பந்தப்பட்டு அதனை ஓர் அரசு நிகழ்ச்சியாக ஆர்எஸ்எஸ் - பாஜக மாற்றி யிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமாகும். எனவே, இந்த நிகழ்வில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதன்முதலாக கடந்த டிசம்பர் 26 அன்று அறிவித்தது. அதைத்தொடர்ந்து, ஏனைய பிரதான அரசியல் கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, சிவசேனா அனைத்துக் கட்சிகளும் ராமர் கோவில் திறப்பு விழா வில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.